Wednesday, September 1, 2021

ஆவியாதல்

ஆவியாதல்,  குளிர்தல் நிகழ்ச்சி ஆகும்.

"என்ன தம்பி இப்படி உனக்கு வேர்க்கிறது?"
"ஒண்ணுமில்லை சார், டாக்டர், சுகர் குறையணும்ன்னா தினம் நாலு கிலோமீட்டராவது ஓடணும்ன்னு சொல்லியுள்ளார். அதுக்குத்தான் ஓடிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கேன். அதனாலே தான் இப்படி வேர்த்து இருக்கு."
"உனக்குத் தெரியுமா தம்பி, வேர்வையை போக்கிறதுக்கு ஒரு சுலபமான வழி இருக்கு."
"விசிறிண்டா வேர்வையேல்லாம் சுலபமா போயிடும் சார். இருங்க விசிறி எடுத்துண்டு வரேன்".
"அதெல்லாம் வேண்டாம் தம்பி. போய் ஃபேனுக்கு அடியில் கொஞ்ச நாழி நின்னு பாரு."
"ஆமாம் சார், என்ன சார் இப்படி குளிர்ச்சியா  இருக்கு,  விசிறிண்டா கூட இப்படி கூலா இருக்காது போல!!!"
"இதுக்கு பேர் "ஆவியாதலால் குளிர்ச்சி" 
(Evoporation means temperature falling)
என்பார்கள். அதாவது எங்கெல்லாம் ஆவியாவதல் நடக்கிறதோ அங்கெல்லாம் குளிர்ச்சி நடக்கும். காரணம் என்னவென்றால் திரவ நிலையில் உள்ள தண்ணீர் (வியர்வை), ஆவியாக வேண்டுமெனில் அது அருகாமையில் உள்ள (உடம்பு) இடத்துல இருந்து வெப்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் அந்த இடத்தின் வெப்பநிலை குறையும். எனவே உடலில் இருந்து வெப்பம் எடுப்பதால் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சியா உணர்கிறோம்."
" ஆமாம் சார் நீங்க சொல்றது சரிதான் சார். இத்தனை நாள் காரணம் தெரியாம இருந்தது."
"அதுக்குத் தான் பிசிக்ஸ் படிக்கணும், தெரியுதா?"

"

Sunday, August 15, 2021

கோபுரங்களின் உள்ளே என் குளிர்ந்த காற்று வீசுகிறது.

ராஜ கோபுரத்தின் உள்ளே ஏன் 
குளிர்ச்சியாக உள்ளது?

ராஜகோபுரத்துக்கு அடியில என்ன இவ்வளவு பேர் கூட்டமாக உட்காந்து இருக்காங்க!. மனைவிக்கு சந்தேகம்.
கேட்டுத்தான் பாப்போமேன்னு தீர்மானம் பண்ணிட்டாங்க போல.
"என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்களேன். இவ்வளவு குளிர்ந்த காத்து உங்க வீட்டு ஏசியுல கூட கிடைக்காது!!!"
இது உட்காந்து இருப்பவரின் பதில்.
"ஆமாம், நின்னுண்டு இருக்கிற கொஞ்ச நேரத்துலேயே இவ்வளவு கூலா காத்து வீசுது பாருங்க அத்தான்" 
மனைவியும் நானும் ராஜ கோபுரத்தின் அருகே இருக்கும் 10 ரூபாய் கடையில் சாமான்கள் வாங்க வந்தபோதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்தது.  அதுல தான் என் மனைவி, இந்த கூலான விஷயத்தை பார்த்துட்டு,
"அது என்ன எல்லா ஊர் கோபுரத்துக்கு அடியிலும் அவ்வளவு பேர் உட்காந்து இருக்காங்கன்னு ரொம்ப நாளாகவே யோசித்துண்டு இருந்தேன். இன்னைக்கு நேராகவே அனுபவிச்சுட்டேன். அது ஏங்க அங்க மட்டும் அவ்வளவு  கூலா இருக்கு?"
"ஆமாம், நீ கேட்கிறதும் சரி தான். எல்லா கோபுரத்துக்கும் அடியிலும்  ஜில்லுன்னு இருக்க ஒரு காரணம் இருக்கு. அதுக்கு J and K effect ன்னு பேர்."
"அப்படின்னா?'
"சொல்றேன்.
ஒரு வாயு அதிக அழுத்தமுள்ள இடத்தில் இருந்து குறைவான அழுத்தமுள்ள இடத்தை நோக்கி பயணிக்கும் போது அதன் வெப்பநிலை குறையும். இதுவே ஜூல்-கெல்வின் விளைவின் தத்துவம். (முழுமையாக படிக்க கூகுளில் தேடவும்)
இது தான் கோபுரங்களின் உள்ளே நடக்கிறது.
கோபுரத்தின் வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் போது அழுத்த வித்தியாசம் ஏற்பட்டு வெப்பநிலையைக் குறைக்கிறது. 
அதனால் தான் கோபுரங்களின் உள்ளே குளிர்ந்த காற்று வீசுகிறது.புரிகிறதா?"
"புரிஞ்சுடுத்துங்க."

Thursday, June 4, 2020

சமையல் அறையில் சங்கீதம்????

சமையல் அறையில் சங்கீதம்!!!!
என்னய்யா தலைப்பு புதுசா இருக்கு!
சமையல்கட்டுல எப்படியப்பா பாட்டு வரும்?
ஓ, நீங்க பால் காச்சுற போது பாத்திரத்துலேர்ந்து  ஒரு விசில் சத்தம் வருமே, அதச் சொல்றீங்களா?
அதுவும் உண்டு, அதோட சமையல் பண்ற குக்கரும் ஒரு விசில் கொடுக்குமே, அதையும் சேர்த்துத் தாங்க சோல்றேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பாத்திரங்கள்,கரண்டி மற்றும் இன்னபிற பொருட்கள் பறக்குமே, அந்த சமயத்துல வர சத்தம் கூட சங்கீதம் மாதிரி தான் இருக்கும் இல்லையா? யாருக்கு சங்கீதமா இருக்கும் அப்படீங்கிறது யார் மேலே கரண்டி விழறதப் பொறுத்து இல்லையா?
அதனால் தான் தலைப்ப அப்படி வச்சேன்  
சமையல் அறையில் பிஸிக்ஸ் எப்படின்னு சொல்லத்தான் இந்த தலைப்பு.

பிஸிக்கல அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் ஒரு தொடர்பு  உண்டுங்க. அதாவது வெப்பத்த கூட்டணும், அதாங்க,  அதிகரிக்கணும்ன்னு வச்சுக்கங்க, அதன் அழுத்தத்தை அதிகரிச்சா வெப்பநிலை கூடும்.அத பாயில் விதிம்பாங்க.
       அழுத்தம்.
உதாரணத்துக்கு தண்ணீரின் கொதிநிலை என்ன?
அதாவது பூமியின் மேற்பரப்புல, நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேடு ஆகும். அப்ப தண்ணீரை ஒரு பாத்திரத்துல வச்சு அத சூடாக்கினா கொஞ்ச நேரத்துல கொதிக்க ஆரம்பிச்சுடும் இல்லையா? அதுக்கும் மேல வெப்பத்த கொடுத்தாக் கூட தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.  ஆனா வெப்பநிலை 100 டிகிரியத் தாண்டாது. அப்ப நாம கொடுக்கிற வெப்பம் பூரா தண்ணீர ஆவியாவதற்கு போய்விடும்.அப்ப என்னதான் பண்றது?
அதுக்குத் தான் பாயில் விதி சொல்றதப்படி செய்யணும். அதாவது அறையின் அழுத்தத்தை கூட்டினா, நீரின் வெப்பநிலை 100 டிகிறியவிட அதிகமாகும். அறையின்  அழுத்தத்தை கூட்டறது அவ்வளவு சுலபம் இல்லை. அப்ப கண்டுபிடிக்கப் பட்டது தான் பிரஷர் குக்கர். அதுல என்ன நடக்குது,  உள்ள இருக்சிற வாயுவ வெளிய போகாம மூடி விடுகிறோம். அதனால கீழே வெப்பம் கொடுக்கும் போது உள்ள இருக்கும் வாயுவின் அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால உள்ளே உள்ள நீரின் கொதிநிலை பாயில் விதிப்படி 100 டிகிறிய விட அதிகமாகி, உள்ளே உள்ள பொருள் சீக்கிரமா வெந்துவிடும் இல்லையா? பிரஷர் ஓரளவுக்கு மேல் தாண்டினா குக்கர் வெடித்துடும் என்பதால, ஓரு வால்வு வைத்து அந்த சமயத்துல உள்ளே உள்ள அழுத்தம் அதிகமா இருக்கிற காற்றை வெளியே தள்ளிடுகிறார்கள்.அத சேப்டி வால்வு என்பார்கள்.
இது தான் குக்கர் வேலை செய்யும் விதம். இப்ப பாத்தீங்களா பிஸிக்ஸ் எப்படி அடுப்பங்கரை வரை வந்துள்ளது! !!!
அது மட்டுமில்லைங்க வேறே ஒண்ணும் சொல்லப் போறேன். அத அடுத்த பகுதியில் பாப்போம். 
என்ன சரியா?

Thursday, April 16, 2020

ஒளியின் வேகம் பகுதி 3

வேகமா எதுக்குப் போகணும்?
சில சமயங்களில் வேகம் முக்கியமுங்க. ஒருத்தருக்கு உடம்பு முடியலன்னு வச்சுக்குங்க. அவர ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகணுமன்னா, என்ன செயவீங்க? மாட்டு வண்டியிலயா கூட்டிண்டு போகமுடியும். அவ்வளவு தான் எமலோகத்துக்குத் தான் போகணும். அப்பவேறே என்ன பணறது? வேகமா போற ஆம்புலன்ஸ தானே பயன்படுத்தமுடியும். அதுக்குத் தான் வேகமா போகணுமங்கிறது.!
உடம்பில் சக்கரை அதிகமா இருக்கிறவங்களை டாக்டர் தினமும் நாலு கிலோமீட்டருக்கு குறையாம நடங்கன்னு சொல்றாங்க. ஆக வேகம் வாழக்கையில ரொம்ப முக்கியம்.
இதுல என்ன வேடிக்கை என்னன்னா, நாம இருக்கிற சூரியகுடும்பம்த்தல இருக்கிற கிரஹங்கள் சும்மா நிலையா இல்லாம தானும் சுத்திகிட்டு, சூரியனையும் சுத்திகிட்டு குறிப்பிட்ட வேகத்துல வருதுங்க. உதாரணத்துக்கு பூமி தனக்குத்தானே சுத்திக்கிறது மட்டுமில்லைங்க சூரியனையும் சுத்துதுங்க.
பூமி மணிக்கு 1000 மைல் வேகத்துல சுத்துதாம். இதவிட முக்கியம் என்னன்னா சூரிய குடும்பமும் சுத்துதாம். இது மாதிரி பல சூரியகுடும்பம், எல்லாமே வெவ்வேறு வேகத்தில சுத்துதாம்.
என்ன சார் பூமி சுத்துதுங்கிறீங்க, நாம எப்படி சார் அத தெரிஞ்சுக்கிறது. பூமி சுத்தறபோது அதோட நாமும் சேர்ந்து தான்ன சுத்தறோம். அதனால தான்நமக்கு தெரியல. உதாரணத்துக்கு ஒரு பஸ்ல போய்கொண்டிருக்கோம்ன்னு வச்சுக்கங்க, பஸ்ஸுனுடைய வேகத்துக்கு உள்ளே இருக்கிற எல்லாம் அதே வேகத்துல தான போகுது. அது போலத்தான் பூமி சுத்தும் போது அதன் பக்கத்தில் உள்ள பொருடகளும் அதே வேகத்தில சுத்தும்.
இப்ப ஒரு பொருளை மேலே தூக்கி எறியறீங்கன்னு வச்சுக்கங்க, அது என்ன ஆகிறது? கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்துடுது, இல்லையா? ஏன் கீழே வருது? காரணம் பூமி எல்லாப் பொருடகளையும் அதனை நோக்கி இழுப்பதினால தான். அதனை புவிஈரப்பு விசை எனபாரகள். அப்ப பொருடகள் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே போகணுமன்னா குறிப்பிட்ட வேகத்துக்கு மேல அந்தப பொருளுக்கு கொடுத்தோமன்னா அது பூமியை நோக்கி வராதுல்ல. அந்த வேகத்த, “விடுபடுதிசைவேகம்” எனபாரகள்.
பூமிய பொருத்த அவரை அது மணிக்கு 4000 கிலோமீட்டரகளாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது வினாடிக்கு 11.2 கிலோமீட்டர்களாம்.
இப்படி வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது நம்முடைய வாழ்க்கையிலங்க.

அப்ப வேகத்துக்கு வரையரை இருக்கான்னு நீங்க கேட்பது காதுல விழறதுங்க. அப்படின்னா எதுங்க பெரும திசைவேகம். ஆமாங்க, ஒளி தான் அதிகமான வேகத்துல போகுதாம். நான் சொல்லலைங்க. ஈன்ஸ்டீன் அப்படிங்கிறவர் தான் சொல்லி இருக்கார்ஙக.

வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*108ms−1 அல்லது 3*108ms−1 (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்
இது மட்டுமில்லைங்க, ஒளியின் வேகத்த ஒரு மாறிலியாக வைத்துக்கொண்டு நிறைய கணக்குகள்போட்டு இருக்காங்க. அதேமாதிரி ஒளி ஒரு ஊடகத்தின் வழியா போறதுன்னு வச்சுக்குங்க, அதன் வேகம் குறையுமாம். அதே போல ஊடகத்த விட்டு வெளியே வந்துட்டா மீண்டும் அதே வேகத்துல போகுமாம். எப்படின்னா நீங்க சிமெண்ட தரையில ஓடிண்டு இருக்கீங்கன்னு வச்சுக்குங்க உங்க வேகம் ஒரே சீரா இருக்கமில்லை.திடீரென்று மண் தரைக்குப் போறீங்கன்னு வச்சுக்குங்க, அப்ப உங்க வேகம் என்ன ஆகும், குறையமில்லை. அதே போலத்தான் ஒளியின் வேகமும் ஊடகத்துல போகும்போதுகுறையுது.
மேலும் ஒளியின் வேகம் தான் யாரும் செல்லக்கூடிய மிக அதிகமான வேகம். இதனை ஈன்ஸ்டீன்தன்னுடைய ஒப்புமைக் கொள்கை ( Theory of relativity)
யில் உலகத்துல மிக அதிகமான வேகம் ஓளி என்றுஅறுதியிட்டு சொல்லி இருக்கார்

அண்டத்துல ஒரு கோளுக்கும் அடுத்த கோளுக்கும் இடையே உள்ள தொலைவை இத்தனை ஒளி தொலைவில் என்று தான் சொலவாரகள்.
அதாவது ஒளி ஆண்டுகள் என்ற அலகை வைத்துக்கொண்டிருக்கிறாரகள்.
அதாவது ஒளி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு செல்லுமோ அதனை ஒரு ஒளி ஆண்டு என்பர்.
ஓராண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு (9.4607 × 10¹² கி.மீ) ஒளியாண்டு. எதுக்காக சொலறேன்னா, சூரியனிடமிருந்து ஒளி நம்மை வந்தடைய கிட்டத்தட்ட 8.20 நிமிஷங்கள் ஆகிறதாம். அப்படின்னா அது எவ்வளவு தொலைவில் இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பாரத்துக்கொள்ளுங்க!!!
ஈன்ஸ்டீன் தன்னுடைய ஒப்புமைக் கொள்கையைப் பத்தி சொல்லும்போது ,,
ஒளியின் வேகம் தான் இறுதி வேகம்ன்னு சொன்னவர், மற்றொன்றையும் சொல்லி இருக்கார்.
என்ன தெரியுமா?
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா என்ன நடக்கும்ன்னு வேற சொல்லி இருக்கார். அதுக்கான சமனபாட்டையும் நிறுவி இருக்கார்ன்னா பாத்துக்கங்க!!
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா அவனுடைய நிறை ஈறீலி என்ற மதிப்பை அடையுமாம்.
அது மட்டுமில்லைங்க.,நேரம்குறைபாடு ஏற்படுமாம். அதாவது, நீங்க ஒளியின் வேகத்துல ஒரு ராக்கெட்டுல போறீங்கன்னு வச்சுக்கங்க, உங்களோட வயசு, கீழே நிலையா அருக்கிற ஒருத்தனுடைய வயச காட்டிலும் குறஞ்சு இருக்குமாம். அதாவது ஒளியின் வேகத்துல ஏதாவது ஒரு கிரஹத்துக்கு போய்விட்டு வந்தோம் என்றால், நம்ம வயசு குறைஞ்சு போயிருக்குமாம்.
நல்ல இருக்குல்ல!!!
இந்த ஐடியாவ வச்சுண்டு நிறைய கதைகள் வந்துருக்கு!!!
இன்னும் அந்த ஒளிய வச்சுண்டு நிறைய எழுதலாம்.
பாப்போம் நேரம் கிடைத்தால்!!!!!!!

Sunday, April 5, 2020

ஒளியின் வேகம் பகுதி 2

வேகம் அப்படின்னா என்னங்க?
ஒரு சினிமால வடிவேலுகிட்ட ஒருத்தர் “இசைன்னா என்னன்னு கேப்பாறே?”
அது மாதிரி தாங்க, நான் கேடபதும்.
ஒரு குறிப்பிட்ட தொலைவை கடக்க எத்தனை நேரம் ஆகுதுன்னு பாருங்க. அப்ப தொலைவை நேரத்தால வகுத்து என்ன வருதோ அதாங்க வேகம்ன்னு.  சொலவாங்க.
அதாவது ஒரு மணி நேரத்துல ஒரு வண்டி 50 கிலோமீட்டர் போகுதுன்னு வச்சுக்கங்க, அப்ப அந்த வண்டியின் வேகம 50கி.மீ/மணிக்கு என்று சொலவார்கள். இதையே வினாடிக்கும் மாத்திக்கலாம்.
எதுக்காக வினாடிக்கும மாத்தணும்ன்னா, பிஸிக்ஸ்ல வேகம்ன்னா, இத்தனை வேகம் வினாடிக்கு இத்தனை கிலோமீட்டர் அல்லது மீட்டருக்கு என்று தான் சொலவார்கள்.
ஒவ்வொண்ணுக்கும் இத்தனை வேகத்தில தான் போகமுடியும்ன்னு இருக்குங்க. இப்ப மனிதன் நடக்கறான்னு வெச்சுக்கங்க, எவ்வளவு வேகமா போகமுடியும். 
ஓட்டப்பந்தய வீரர்கள் தான் வேகமா ஓடுவாங்க. அவங்களும் பந்தயத்தில் தான் தங்களின் வேகத்தைக் காட்டுவாங்க. ஹுசைன் போல்ட் அப்படிங்கிற பந்தய வீர்ர மணிக்கு 29-30 கிலோமீட்டர் வேகத்துல போவாராம். மத்தவங்களோட வேகம் மணிக்கு 4 அல்லது 5 கிலோமீட்டர் தான் இருக்கும்.
ஒரு கதை கேட்டு இருப்பீங்க, அதாங்க ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப்பந்தயம் வச்சாங்க. அதுல எப்படி வேகமா போற முயல் தோத்து ஆமை ஜெயிக்கும். அது முயலின் ‘இயலாமை” தான் காரணம்.
இது மாதிரி, வேகமா போற பொருடகளின் லிஸ்ட் பாத்தோம்ன்னா,
ஜப்பான்காரங்க மிக வேகமா போற ரெயில், அதாங்க புல்லட் ரயில், மணிக்கு 300-400 கிலோமீட்டர் வேகத்துல போற மாதிரி தயார் பண்ணிட்டாங்க.

இதவிட வேகமா போகணும்ன்னா, ராக்கெட்டுகளைத் தான் சொல்லணும். பல நாடுகள் தங்களுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமா போற ராக்கெட்டுகளை தயார் செய்து விண்ணுக்கு அனுப்பிக் கொண்டு இருக்காங்க.
இன்னும் பாப்போம் அடுத்த பகுதியில்!!!!!

Friday, March 27, 2020

 ஓளியின் வேகம்.
“என்னங்க இவ்வளவு வேகமாப் போறீங்க! அங்க பாருங்க பக்கத்தில, சைக்கிள்ள போற எட்டாங்கிளாஸ் படிக்கிற பையன, உங்க வண்டிய ஓவரடேக் பண்ணிண்டு போறான். வெக்கமா இருக்குங்க. கொஞ்சம் வேகத்த கூட்டுங்க”.
ஸ்கூட்டியில் 25 கிலோமீட்டர் வேகத்தில போயக்கொண்டு இருக்கும் என்னிடம் பின்னாடி வசதியா உக்காந்துண்டு வரும் என் மனைவி புலம்பல் தான் அது..
இதுக்கெல்லாம் அசறு வேனா நான். இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால ரோடுல போய்க்கொண்டு இருக்கும் போது, இத்தனைக்கும மணிக்கு 20 கிலோமீட்டர வேகத்தை தாண்டாத என்னை நோக்கி, எங்கிருந்தோ ஒரு குறுக்குச் சந்திலிருந்து ஒரு சின்னப் பையன் வந்து மோதி பதினைந்து நாள் ஆஸ்பத்திரியில் எனக்கு “ஸிருஷை” (கூடவே இருந்து ஆகாரம், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தல், நான் தூங்காம இருக்கும் போது அவங்களும் தூங்காம இருக்கிறது போன்றவைகளைத் தான், அப்படிச் சொலவாங்க) செயததை மறந்துவிட்டாரகள் போல.
ஆமாங்க, வேகம் முக்கியமுங்க! அதவிட விவேகமும் தாங்க!
அது சரி, வேகத்த கூட்டினிங்களான்னு கேட்பது காதுல விழறது.
அது எப்படீங்க முடியும?
அஅந்தந்த இடத்தில இவ்வளவு வேகத்துல தான் போகணும், அப்படின்னு போர்டு வச்சுருக்காங்க இல்லையா?
நான் முன் ஜாக்கிறதை முத்தண்ணாங்க!
எதுக்கு இத்தனை பீடீகை?
ஆமாங்க, பிஸிக்ஸ் இவ்வளவு ஈஸியா என்ற தலைப்பில வேகத்தப் பத்தி லகுவா சொல்லாமன்னு இருக்கேன், அதுக்குத்தான் இத்தனை முத்தாய்பு!!!
சரி, அடுத்த பகுதியில பாப்போம். வேகதப் பத்தி!,
என்ன சரியா?

Wednesday, December 18, 2019

என்ன எடைய குறைக்கணும்ன்னா இங்க போகணுமா?
போன பகுதியில நம்மளுடைய எடையை எப்படி குறைக்கறது.
அப்படின்னு கேள்வியோட நிறுத்தி இருந்தேன்.
இப்ப அதப் பத்தி மேல பாத்துட்டு, கடைசியாக அந்தக் கேளவிக்கான பதில பாப்போம்!!!
தல மேல ஆப்பிள் விழுந்து கலங்கி உக்காந்து இருந்தார் ஒருத்தர்னு முந்தின பகுதியில முடிச்சு இருந்தேன்.
யார் இது?
வேற ஒத்தரும் இல்லீங்க. சர் ஐசக் நியூட்டன் தாங்க அவர்.
மளமளவென வேலையில் இறங்கினார். மூணு விதிகளை உருவாக்கினார்.
அவைகள் தான் நியூட்டனின் “இயக்கவியல் விதிகள்” என்று சொல்லப்படும் “NEWTONS LAW OF MOTION”, ஆகும்.
அதப்பத்தி நாம முன்னாலயே பாத்து இருக்கோம்.
மேலே போன பொருள் ஏன் கீழே விழரது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடினதுல கிடைச்சது தான், பூமி எல்லாப் பொருட்களையும் தன்னை நோக்கி இழுத்துக் கொள்கிறது என்கிற புவிஈர்ப்பு முடுக்கம் எனும் தத்துவம். அது மட்டுமில்லைங்க, சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் எல்லா கிரஹங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சொன்னார்.
இப்ப உலகத்துல உள்ள நாடுகள் இவருடைய தத்துவத்தைப் பயன்படுத்தி தான் ராக்கெட்டுகளை ஏவுகிறாரகள் என்றால் பாத்துக்கங்க!

இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய, ‘g’, (acceleration due to gravity)எனபது தான்.
போன பகுதியில அதப்பத்தி கொஞ்சம் பாத்தோம். அதுல “நிறை”, “எடை” ரெண்டும் ஒண்ணா அல்லது வெவ்வேறா, என்ன வித்தியாசம் போன்றவைகளைப் பத்தி பாத்தோம். ரெண்டும் இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய பூமி எல்லாப் பொருட்களையும் ஈர்க்க க்கூடிய தன்மை என்ற விஷயம்.
அதுல தான் எடை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது, மாறக்கூடியது என்று பாரத்தோம். இடத்துக்கு இடம் மாறும்ன்னு சொன்னேன்.
 

ஆமாம், பூமியின் மேற்பரப்புல இருக்கும் எடை, பூமியின் மையத்தை நோக்கிச் செல்லும் போது மாறுமாம். கீழே ஒரு சமன்பாடு கொடுத்துள்ளேன் பாருங்க.
அதாவது, ‘g ங்கிறது பூமியின் மேற்பரப்புல இருக்கும் புவிஈர்ப்பு முடுக்கம்ன்னு வச்சுக்கங்க, g1’ங்கிறது பூமியின் கீழே ‘h’மீட்டர் ஆழத்தில் உள்ள புவிஈர்ப்பு முடுக்கம் எனக் கொண்டால், அத இரண்டையும் இணைக்கும் சமன்பாடு,
                             g1=g(1-h/R)  
என கண்டுபிடித்துள்ளார்கள். இதுல என்பது, பூமியின் ஆரம். எனவே பூமியின் மேற்பரப்பில் இருந்து கீழே இறங்க இறங்க, g மதிப்பு குறைந்து கொண்டே வரும். மதிப்பு R  மதிப்புக்கு சம்மாகும் போது g1 சுழியாகும். அதாவது புவிஈர்ப்புமுடுக்கம் சுழியாகும்.
அப்படின்னா, எடை என்னவாகும்?
ஆமாம், நீங்க கேட்பது சரிதான். பூமியின் மையத்துக்கு போனா நமக்கு எடை கிடையாது!!!!
ஆஹா, நல்லது பண்ணீங்க, நம்ம வீட்டுக்காரர், எடைய குறைக்கிறேன் பேர்வழின்னு பாவம் நடக்கிறது, ஆசனம் அது இதுன்னு என்னத்தையோ பண்ணிண்டு இருக்கார். தொப்பை ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியல!! பேசாம அவர பார்சல் பண்ணி பூமியின் மையத்துக்கு அனுப்பிடலாமன்னு சொல்லுங்க!!!!
இது எப்படி இருக்கு பாருங்க?
இத விட இண்ணொண்ணு இருக்குங்க!
நமக்கு பிடிக்காத ஆள, என்ன பண்ணலாம்ன்னா, பூமியின் மையத்த நோக்கி ஒரு குழி வெட்டி, அதுக்கள்ள தள்ளிட்டா, அவன் மேலுக்கும் கீழுக்குமா ஆடிக்கொண்டு இருப்பானாம்.
அதப்பத்தி உள்ள ஒரு வீடீயோவப் பாருங்க!!!

https://www.universetoday.com/123591/what-if-we-dug-a-tunnel-through-the-earth/

Tuesday, December 17, 2019

எடை குறைக்க என்ன வழி? பகுதி-1

என்னது, எடைய சுலபமா குறைக்க வழி இருக்கா?
மரத்தடியில அவர் ஏதோ சிந்தனைபில் ஆழ்நதிருந்தார். எந்தப் பக்கம் போனாலும் உதைக்கிறதே? என்ன செய்வது?
என்ன முடிவு கிடைக்கும்? நாம் எடுத்து இருக்கும் முடிவு சரியாக இருக்குமா? இப்படி பல சிந்தனையில் சிறிது நேரம் கண்ணசைந்து விட்டார்.
திடீரென்று தலையில் பலமான அடி! திடுக்கிட்டு விழித்துப்பாரத்தால் மேலிருந்து ஒரு பழம் தலையில் விழுந்து சிறிது தூரத்துக்கு ஓடி நின்றது. 
ஆம், அது ஆப்பிள் பழம் தான்!
அது ஏன் தன் தலையின் மீது விழவேண்டும்?
ஆப்பிள் மட்டும் தான் விழுமா, இல்லை எல்லாப் பழங்களுமே விழுமா?
யோசிக்கத் தொடங்கினார்.
உடனே பக்கத்தில இருந்த கல்லைத் தூக்கி எறிந்தார். அது கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே தான் விழுந்த்து. 
சிந்திக்கத்துவங்கினார்.

(பிஸிக்ஸ்னா காததூரம் போகும் நம்ம கிச்சா மைண்ட் வாய்ஸ்,”இவர யார் சிந்திக்கச் சொன்னாங்க, வாத்யார் நம்மளப் போய் அந்த விதியைப் படி, இந்த விதியைப் படின்னு கழுத்தறுக்கிறாங்கன்னு”, சொல்றது காதுல விழறது.)

ஏன் கல்லு தூக்கிப் போட்டாலும் கீழே விழறது, பழத்தப் போட்டாலும் கீழே விழறது!!! கொஞ்சம் வேகமா தூக்கிப் போட்டு பாரத்தார். கொஞ்ச அதிகமான உயரம் போயிட்டு மீண்டும் தரையை நோக்கியே விழுந்த்து,
ரெண்டு மூணு நாள் அதே சிந்தனை.
முடிவுக்கு வந்தார்!!
என்ன முடிவு?
யார் முடிவு செய்தார்?
மண்டையக் குடையுதா?
அடுத்த பகுதியில பாப்போம், என்ன சரியா?

Friday, November 29, 2019


“நீரில் கோலம் போடாதே!”
இது நம்ம வீடுகளில் பெரியவர்கள் அடிக்கடி சொல்வது வழக்கம். ஏன் அப்படிச் சொலறாங்கன்னா நீரில் கோலம் போட்டா வீடு விளங்காம போயிடுமாம்.
பிஸிக்ஸ் ரொம்ப ஈசிங்க என்ற தலைப்பில நீரால எப்ப கோலம் போடுவாங்க எனபதப் பத்திப் பாப்போம். அதனால ஒண்ணும் குறைஞ்சுட மாட்டோம். என்ன சரியா?
ரெண்டு பேர் எதிரெதிரா பேசிண்டு இருக்காங்கன்னு வெச்சுக்கங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரே அதிர்வெண்ணுல பேசிக்கறாங்கன்னு வச்சுக்கங்க, அப்ப அவங்களோட ரெண்டு அலைகளும் சந்தித்தால், அங்க ஒரு படம் உருவாகுமாம். அந்தப் படத்துக்குப் ஒரு பேர் வச்சுருக்காங்க! அது “லிஸ்ஸாஸூஸ் படம்’” ன்னு பேர்.
அத எப்படி சார் பாக்கறது?
அதாங்க நாம பேசிக்கிறத கேடக முடியுமே தவிர எப்படி சார் அலைகளா பாக்கிறது?
கரெகட்!
ஆமாம, அலைகளை பாக்கணும்ன்னா என்ன சார் பண்றது?
அதுக்குத்தான் ஒரு வழி இருக்கு.
நாம ஒரு மைக்ரோஃபோன் முன்னால பேசினோம்ன்னா அது பேச்சை மின் அலைகளாக மாற்றும். அத ஒரு கேதோட் ரே ஆஸிலோகிராஃப் எனகிற அமைப்பில கொடுத்தா அது நாம என்ன பேசறோமோ, அதன் அலை வடிவத்த உருவாக்கிக் கொடுக்கும்.அது தான் நம்முடைய ஒலி வடிவத்தின் படம் ஆகும். 
அந்த அமைப்பை சுருக்கமாக (CRO) சீ.ஆர்.ஓ. என்று அழைப்பாரகள். அந்த அமைப்புல Xதகடு மற்றும  Y தகடுன்னு ரெண்டு அமைப்புகள் இருக்கும். ஒண்ணு கிடை மட்டத்தையும் மற்றது செங்குத்து மட்டத்தையும் அளக்கும். அதனால நாம பேசற ஒலி வடிவம் இரு தகடுல கொடுக்கற போது, அந்த ஒலியின் அதிரவெண், அதன் வீச்சு, எந்தக் கோணத்தில் கொடுக்கப்படுகிற என்பவைகளைப் பொறுத்து படம் அமையும்.
இந்தப் படம் நாம கோலம் போடுவதப் போல இருக்கும்.
இதனால என்ன உபயோகம்?
என்ன படம் திரையில தெரிகிறதோ, அந்தப் படத்த வச்சு, ஒரு தெரிஞ்ச அதிர்வெண்ணை ஒரு தகடுலயும், தெரியாத அதிரவெண்ணை மற்றொரு தகடுலயும் கொடுத்து, வரக்கூடிய படத்த வச்சு மற்ற அதிரவெண்ணைக் கண்டுபிடிப்பாங்க.

இதுதான லிஸ்ஸாஜூஸ் படங்கள் என்று சொலவார்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க சொடுக்கி அது காண்பிக்கும படத்தப் பாருங்க, உங்களுக்கே புரியும்.

கீழே 


இப்ப புரியுதா, எப்படி பெண்கள் கோலம் போடறாங்கன்னு?

பாப்போம் அடுத்த பகுதியில் இன்னொரு ஈசியான பிஸிக்ஸ!!!!!!!

Thursday, May 9, 2019

எடை, நிறை என்ன வித்தியாசம்?

Balance for finding weight
Balance for finding tha mass



“என்ன சார் இப்படிச் சொல்றீங்க? இத்தனை நாளும் நிறையும் எடையும் ஓண்ணுதான்னு நினைச்சுண்டு இருந்தேன். அப்படியில்லை ரெண்டும் வேறே வேறே அப்படீன்னு குண்டத் தூக்கிப் போடறீங்க?”
மாணவன் ஆசிரியர் சொன்னதக் கேட்டு மூச்சடச்சு போய் நிலைதடுமாறி, ஆசுவாசப் படுத்திக் கொண்டு மேலே சொன்ன மாதிரி ஆசிரியரிடம் கேட்டான்.
“ஆமாம் தம்பி, நான் சொல்றது தான் சரிப்பா. நிறையும் எடையும் ஒண்ணு இல்லப்பா. ரெண்டும் வெவ்வேறு தான்”
“ஆச்சர்யமா இருக்கு சார். கடையில, காய்கறி மார்க்கெட், இந்த மாதிரி எங்க போனாலும், நாம “ரெண்டு கிலோ ஜீனி கொடுங்க”ன்னோஅல்லது ரெண்டு கிலோ வெண்டைக்காய் கொடுங்க”ன்னு தானே கேட்போம்..இப்ப அத தப்புங்கிறீங்களே சார்.”
“அப்படின்னா நிறையும் எடையும் ஒண்ணு இல்லையா?”
“ஆமாம் தம்பி, நிறைங்கறது பொருள் எதனால் ஆக்கப்பட்டு இருக்கோ, அந்த துகள்கனின் தனித்தனியான நிறைகளின் கூட்டுத்தொகை நிறை என்பார்கள். ஆனால் எடை  என்பது அந்தப் பொருளின் மீது செயல்படும் விசையால் குறிக்கப்படும் தம்பி.”
“அதாவது நிறையை பொதுவா “M” என்ற குறிப்பிடுவார்கள். ஆனால் எடையை “Mg” எனக் குறிப்பிடுவார்கள். இதுல “g” என்பது புவியிருப்பு முடுக்கம் ஆகும். அதாவது  நிறையை புவிஈப்பு முடுக்கத்தால் பெருக்கினா வறது தான் எடை எனப்படும்.தம்பி.” நாம ரொம்ப நாளா இப்படிச் சொல்லியே பழகிட்டோம் இல்லையா, அதனால் தான் உனக்கு ஷாக்கா இருக்கு”
“அப்படின்னா “,”g”,ன்னு நீங்க சொல்ற புவிஈர்ப்பு முடுக்கும் என்ன சார்”?
“ஒரு பொருளை மேலே தூக்கி எறியறேன்னு வச்சுக்க. அது என்ன ஆறது?”
“கொஞ்ச தூரம் மேலே போயிட்டு பூமி ஈர்க்கறதால கீழே வந்துடுது சார். இதத்தான் ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் கண்டுபிடிச்சு சொன்னார்ன்னு படிச்சு இருக்கோமே சார்”.
“சரியாச் சொன்ன தம்பி”
“அப்படீன்னா ஒரு பொருள் ஒரு நிறையில எப்படி சார் சொல்றது. எடையில எப்படி சார் சொல்றது? “
“நல்ல கேள்வி கேட்ட தம்பி.ஒரு பொருள் இத்தனை கிலோகிராம் நிறையுள்ளது என்றும், அதையே இத்தனை நியுட்டன் எடையுள்ளது என்றும் சொல்லவேண்டும் தம்பி.”
“இன்னொன்னு தம்பி., இதுக்கு எல்லாம் எந்த திராசப் பயன்படுத்துவாங்கன்னு தெரிஞ்சுக்கணும் நீ”
“ஆமாம் சார்,அதப் பத்தி கேட்கமறந்துட்டேன் பாருங்க. “
காய்கறிக் கடையில பாத்து இருப்பியஒரு தராசு,  அதான் தம்பி, ஒருபக்கத்துல எடைக் கற்கள் வச்சுட்டு மறுபக்கம் காய்கறி போன்ற பொருட்கள் வச்சு பாத்தாங்கன்னா,அங்க. நாம தெரிஞ்சுக்கிறது “நிறை”ன்னு பேர்.



அப்படி இல்லாம வில் தராசுன்னு,பொருள தொங்கவிட்டு பாத்தாங்கன்னா, அங்க நாம பாக்கிறது “எடை”ன்னு பேர்.
“ஏன் சார் ரெண்டுலுயும் பாக்கிறது ஒரே மாதிரி இருக்குமா இல்லை வித்தியாசமா இருக்குமா?”
“ரெண்டுலயும் ஒரே மதிப்பு தான் வரும், ஆனா வில் தராசுல பாக்கிறதை “நியூட்டன்” என்றும், காய்கறி வாங்கற தராசுல வரது “கிலோகிராம்” என்றும் அழைப்பார்கள்.
அப்ப “g” மதிப்பு மாறுமா சார்”
“நல்ல கேள்வி கேட்ட. அதப்பத்தி அடுத்த பகுதியில் பாப்போமா”
“சரி சார்”.






Saturday, April 20, 2019

சொந்தங்கள் நம்மைவிட்டு விலகிச் செலகிறார்களா?

“நம்ம சொந்தங்கள் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்களா இல்லையா?”
பிஸிக்ஸஇவ்வளவு ஈசியா தலைப்புல இதெல்லாம் எப்படி சார்?”
“அதாங்க, அண்ணன், தம்பி, கொழுந்தியா, அத்தை, மாமன். இவங்கள்ளாம் நம்மை விட்டு எப்பங்க விலகிச் செல்வாங்க?”
“அவங்களுக்குத் தெரியும், எப்ப இருக்கணும் எப்ப விலகணுமன்னு.”
“ஆமாங்க,  நீங்க சொல்றது கரெக்ட்.  நம்மகிட்ட பணம் இல்லைன்னா, என்ன சொன்னாலும் கேட்க மாட்டாங்க, சத்தம் போடாம இருந்த சுவடுகூட தெரியாம நம்ம விட்டு விலகிடுவாங்க.”
“இங்க நா அதப்பத்தி சொல்ல வரலங்க.”
“பின்ன எதப்பத்திங்க?”
“நாம இருக்கோமே பூமி, அது சூரியகுடும்பம்ன்னு சொல்றதுல இருக்கு. “விண்வெளியில, சூரியன்,  நிலா, வெவ்வேறு கிரஹங்கள் போன்றவைகளத்தான் சூரிய குடும்பத்தில் இருக்கு, அதப்பத்தி தான்  சொல்லவரேன்”.
“அவைகள்  அப்படியே அதுபாட்டுக்கும் சுத்திண்டு இருக்கா இல்லை, அவைகள் விலகிச் சென்று கொண்டிருக்கா, அப்படீன்னு தான் கேட்கிறோம்.”
“இதக் கண்டுபிடிக்கிறது ரொம்ப சுலபமுங்க.
எப்படீங்கிறீங்களா?”
“இதுக்குத்தான் பிஸிக்ஸ் பயன்படுதுங்க”.
“எப்படி சார்ன்னு கேட்கிறீங்களா?”
“பின்னால வர விஷயத்த படீங்க, உங்களுக்கே புரியும்.”
“இதப்பத்தி சொல்றதுக்கு முன்னால
 கொஞ்சம் அமைதியா இருந்து கொஞ்சம் கவனி. ஒரு ஆம்புலனஸ் வேகமா வர மாதிரி தெரியல?”


“ஆமாம் சார். சத்தம் அதிகமா வரதப் பாத்தா அப்படித் தான் தெரியுது சார்.”
“இதே மாதிரி தான் தம்பி, ரயில்வே ஸ்டேஷன்ல கூடப் பாத்திருப்பே”.
“ஆமாம் சார் ரெயில் நம்மை நோக்கி வரும்  போது அது உண்டாக்கும் சப்தம் அதிகரிக்கிறது.”
“ஆமாம் தம்பி,  ரயில் நம்மள நோக்கி வரும் போது ‘சப்தம்’ மாறது இல்லைப்பா, ‘அதிர்வெண்ணுல’ தான் மாற்றம் ஏற்படும். அதே மாதிரி,  ரயில்  நம்மை விட்டு  விலகிச் செல்லும் போதும் இதே மாதிரி மாற்றம் ஏற்படும்.  அதாவது நம்மை நோக்கி வரும் போது அதிர்வெண் அதிகரித்தும்,  நம்மை விட்டு விலகும் போது அதிர்வெண் குறைவதும் நடக்கும்.  இது ரயிலுக்கு மட்டும் இல்லை தம்பி,  சப்தம் போட்டுக்கொண்டு நகரக்கூடிய எல்லாப் வாகனங்களுக்கும் பொருந்தும்.”


“வேற எதுக்கெல்லாம் சொல்லலாம் சார்.”
“இது ஒலிக்கு மட்டுமில்லை தம்பி,  ஒளிக்கும் ( LIGHT) பொருந்தும்ன்னு கண்டுபிடிச்சு இருக்காங்க. “
“இத யார் சார் கண்டுபிடித்தார்.”
“டாப்ளர் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தது. அதனால இது டாப்ளர் விளைவு  என்று சொல்வார்கள். சோகம் என்னன்னா, இதச் சொன்ன டாப்ளர், அவரோட காலத்துல யாரும் நம்ப மாட்டேன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு தான் இதன் மகிமை எல்லோருக்கும் புரிஞ்சது. அதற்குப்பின் அதன் உபயோகம் பல மடங்கு அதிகரித்து
உள்ளது.
“வேறே எங்கெல்லாம் இத பயனபடுத்தறாங்க?”
“இந்த விளைவை பயன்படுத்தி ஒரு பொருள் எத்தனை வேகத்தில் பயணிக்கிறது. நம்மை நோக்கி வருதா, அல்லது நம்மை விட்டு விலகிச் செல்லுகிறதா, நம்மை நோக்கி வர எத்தனை நேரம் ஆகும் போன்றவற்றை எல்லாம் டாப்ளர் விளைவைப் பயன்படுத்தி கண்டுபிடிக்க முடியும். இது மட்டும் இல்லை, அண்டவெளியில் நாம மற்ற கிரஹங்களை விட்டு விலகிச் செல்கிறோம் என்பதை இந்த விளைவின் மூலமாகத்தான் கண்டுபிடித்துள்ளாரகள்.”
“எப்படி சார், இதகண்டு பிடிப்பார்கள்.
“கண்ணால பாக்கிற ஓளிய ஊதாலேர்ந்து சிவப்பு வரைக்கும், அப்படீங்கற மாதிரி, அலைநீளத்துக்கு தகுந்த மாதிரி பிரித்துக் கொள்வார்கள். ஊதாவின் அலைநீளமானது குறைவு. சிவப்பு ஒளியின் அலைநீளமானது அதிகம். இவைகளின் அதிரவெண் நேர் எதிரானது. முன்னால நான் சொன்னமாதிரி, நம்மள நோக்கி  வாகனம் வந்தா, அதிர்வெண் அதிகமாகும்ன்னு சொன்னபடி, வானத்துல நாம சோதிக்கிற பொருளின் வண்ணம் சிவப்பு நோக்கி போனால், அந்தப் பொருள் நம்ம விட்டு விலகிச் செல்லுதுன்னும், ஊதாவை நோக்கிப் போனால், நம்ம நோக்கி வருதுன்னும் கொள்ளலாம். அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ற போதுதான், வான்வெளி விரிவடைந்து கொண்டு இருக்குன்னு கண்டுபிடித்துள்ளார்கள்.
(Expanding universe)  என்ற தத்துவம் அதில் இருந்து தான் வந்துள்ளது.”
“இது மட்டுமில்லை தம்பி, மருத்துவத்தில் இன்னும் பல இடங்களில் கூட இந்த விளைவு பயன்படுது தம்பி.”
“நான் உனக்கு அஸ்திவாரம் தான் போட்டு உள்ளேன். நீயா நிறைய படிக்கணும், அப்ப தான் மேல இதப்பத்தி உலகத்தில் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கலாம் தம்பி.”
“ நிச்சயமாக படிக்கிறேன் சார்.”
“ பிசிக்ஸ் இவ்வளவு ஈசின்னு தெரிஞ்சுக்காம போயிட்டேன் சார்.”




Monday, April 16, 2018

மாயமில்லை மந்திரமில்லை







மாயமில்லை ,மந்திரமில்லை  !!!!!!

சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். அதனை இரண்டு படங்களாக காணபித்துள்ளேன்.
அதுல ஒரு பொம்மை பாத்திரத்தில் இருக்கும். பாத்திரத்தில் தண்ணீர் சேரத்துக்கொண்டே வருவார்கள்.அதன் வாய் வரை தண்ணீர் சேரப்பாரகள், தண்ணீர் அதிலேயே இருக்கும். ஆனால் வாய்கிட்ட நீர் வந்தவுடன் எல்லா தண்ணீரும் காலியாகிவிடும். மாயாபஜார் படத்துல கடோத்கஜன் எப்படி எல்லா ஆகாரத்தையும் சாப்பிடுவானோ, அதே மாதிரி இங்கு எல்லா நீரும் காலியாகிவிடும்.
பார், எப்படி எல்லா தண்ணீரையும் கடோத்கஜன் சாப்பிட்டு விட்டான் என்று பீத்திக்கொள்வாரகள்.(படம் 2)
என்னடா இது புதுசா இருக்கு?
நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சி ஆச்சரயமா இருக்கும்.
ஆந்திர மாநிலத்தில் ஒரு நரசிம்மர் சன்னிதியில, நாம பானகத்தை நரசிம்மர் வாயில் ஊத்தினா பாதிய எடுத்துண்டு மீதி பாதிய நமக்கு பிரசாதமா கொடுப்பார் என்றும் சொல்வார்கள். நீங்களும் கேட்டு இருப்பீர்கள்!!!
இதுல எந்த மாயமும இல்ல.
விஞ்ஞானத்தின் மூலமா இத விளக்கலாம். ஒண்ணுமில்லை, இது சைஃபன் என்ற தத்துவத்தில் வேலை செய்கிறது.
இந்த ஐடியாவ நம்ம வீட்டுல நாம பயனபடுத்துற WESTERN TOILET, பயனபடுத்துறாங்கன்னா பாத்து இருப்பீர்கள்?
படத்த பாருங்க, அதுல யூ மாதிரி இருக்கற இடத்துல எப்பவும் தண்ணி இருந்துண்டே இருக்கும் இல்லையா.

அது போலத்தான் படம் 2 ல காண்பித்தது போல ஒரு பிளாஸ்டிக் குழாய வச்சு அது மேல, குழாய் தெரியாம ஒரு பொம்மையை வைத்துடணும்.குழாயின் மறுமுனை பாத்திரத்தின் கீழ் வழியா கொண்டு போய் லீக் இல்லாமல் செய்துடணும்.
இப்ப பாத்திரத்தில் தண்ணி ஊத்தினா, தண்ணி வாய் வர வரைக்கும் ஒண்ணும் ஆகாது. வாயகிட்ட வந்தவுடன் எல்லா தண்ணியும் மேல அழுத்தம் இருக்கிறதால மறுமுனை வழியா வெளியேறிடும்.
இது தான் சைஃபன் தத்துவம்.
இத வச்சு தான் அந்த வாசுதேவ கிருஷ்ண பொம்மையும் வேலை செய்யுது.
அதுலயும் இந்த மாதிரி குழாய் வச்சுருப்பாங்க. தண்ணி கால தொட்டவுடன் எல்லா தண்ணியும் வெளியே வந்துடும்.
எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க!!
எப்படி பிசிக்ஸ் ஈசியா இருக்கு பாருங்க!!!!!

Saturday, March 24, 2018

வில்லனா, ஹீரோவா இரண்டாம் பகுதி

வில்லனா, ஹீரோவா இது?
அப்படின்னு முன்னால பார்த்தோம் இல்லையா?
அதுல “புறவிசை” அப்படீங்கிறது சில நேரங்களில் வில்லனாகவும், சில நேரங்களில் ஹீரோவாவும் செயலபடுது அப்படீன்னேன்.
இதுக்கெல்லாம் நியூட்டன் தான் காரணம்.
ஒரு கற்பனை!!
இயற்பியல் பிடிக்காத மாணவன் ஒருத்தன் சொன்னானாம், “ அந்த ஆப்பிள் தரையில் விழறதுக்கு பதிலா, நியூட்டன் தலையில விழுந்து இருக்ககூடாதா?”
“ஏன்டான்னு” வாத்தியார் கேட்டாராம்.
“அந்த ஆப்பிள் தரையில விழுந்ததைப் பாத்துத் தானே நியூட்டன் விதிகள் உண்டாக்கினார், அவர் தலையில விழுந்து இருந்தா விதிய கண்டுபிடிக்க அவர்  இருந்து இருக்கமாட்டார் இல்லையா? நாமும் அத படிக்காம இருந்து இருக்கலாம் இல்லையா?”
எப்படி போறது பாருங்க பத்தி?
அவனுக்கு தோணல, நியூட்டன் இல்லைன்னா இன்னொருத்தர் விதிய கண்டு பிடிச்சு இருப்பார், ஏன்னா நியூடன்னுக்கும் முன்னாலேயும் ஆப்பிள் விழுந்துண்டு தானே இருந்தது.
அது போகட்டும், நாம விஷயத்துக்கு வருவோம்!
நியூட்டன் மூணு விதிய சொன்னார், அதுல முதல் மற்றும் மூன்றாம் விதிகள பாத்தோம் இல்லையா?
அப்ப இரண்டாம் விதி என்னன்னு கேட்கிறீர்கள் தானே?
அத சொலறதுக்கு முன்னால, பேப்பர்ல நீங்க அடிக்கடி இத பாத்து இருப்பீங்க!
“பறவை மோதியதில் விமானத்துக்கு சேதம்!
விமான ஓட்டியின் சாதுரியத்தால், பறவை மோதியதால பழுதான விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார்”.
என்னய்யா விசித்திரமா இருக்கு, ஒரு சின்ன பறவை அவ்வளவு பெரிய விமானத்துல மோதியதுல, விமானத்துக்கு சேதமாம். என்ன கதையா சொலறீங்க?
இல்ல, நிஜந்தான்!
அங்க தான் இரண்டாவது விதி வருது!!!!
இந்த விதியில விசைய எப்படி அளக்கறதுன்னு ஒரு ஃபாரமுலா சொல்லி இருக்கார் நியூட்டன்.
நிறை அதிகமானால்  விசை அதிகமாகுமாம். அது மட்டும் இல்லை, முடுக்கம் அப்படின்னு புதுசா ஒண்ணச் சொல்லி இருக்கார்.
அது என்ன முடுக்கம்,அப்படீங்கிறீரகளா?
நேரத்தை பொறுத்து திசைவேக மாறுபாடு முடுக்கம் எனப்படும். 


         

     


அதாவது    முடுக்கம் 



எனவே திசைவேக மாறுபாடு அதிகமானாலோ, நேரம் குறைந்தாலும் முடுக்கம் அதிகமாகும்.
எனவே விசை F என்பது நிறை, மற்றும் முடுக்கத்தின் பெருக்குத்தொகை ஆகும். இதனை இரண்டாம் விதி என்பர்.
இப்ப கொஞ்சம் யோஜனை பண்ணிப்பாருங்க, ஏன் பறவை ஆகாயவிமானத்தின் மிது மோதினால் விமானத்துக்கு சேதம் ஏறபடுதுன்னு.
விமானத்தின் நிறை மற்றும் அதன் வேகம் மிக அதிகமாக இருப்பதால் குறைவான நிறை கொண்ட பறவை மோதும் போது, விசை அதிகமாகி சேதம் அதிகம் ஏற்படுகிறது.
அதனால தான் நாம இருசக்கர வாகனத்தில் போகும் போது தலகவசம் அணிந்துகொண்டு செல்லுங்கள் என்று படித்து படித்து சொல்கிறார்கள்.

Wednesday, February 7, 2018

வில்லனா, ஹீரோவா?? முதல் பகுதி

வில்லனா, ஹீரோவா?? முதல் பகுதி.
“சார், சைக்கிள்ள டபுளஸ் அடிக்கணும்ன்னா, ஓட்டிண்டு போகும் போது உங்க மனைவிய ஏறச்சொல்றத விட்டுட்டு, இப்படி பின்னால உக்காத்திவச்சு ஸ்டாட் பண்ணிங்கன்னா கஷ்டமாக இருக்காதா சார்”
என்னுடய மாணவன் நான் என் மனைவியை வச்சு சைக்கிள் ஓட்டறதப் பாத்துட்டு தான் மேல சொன்ன கேள்வியை கேட்டான்.
“ஏம்ப்பபா இப்படி கேடகிறே?” மாணவனிடம் கேட்டேன்.
“நீங்க தான சார், பாடம் சொல்லிக் கொடுத்தீரகள், இந்த உதாரணத்தை.”
“நான் சொல்லிக்கொடுத்தேனா?”
“ஆமாம், சார் உராய்வு அப்படிங்கிற பாடத்த நடத்தற போது உராய்வு ரெண்டு வகைப்படும்,  ஒண்ணு நிலையான உராய்வு, (static friction) மற்றொன்று (dynamic friction) ஓடும் போது இயங்கு உராய்வுன்னு”
“ஆமாம் தம்பி. பரவாயில்லையே. நான் எப்பவோ நடத்தின பாடத்தை ஞாபகம் வச்சுண்டு எனக்கு சொல்றயே”
“இல்லையா சார், நீங்க நடத்துற பாடம் பசு மரத்து ஆணி போல பதிந்து இருக்கு சார், அப்பப்ப நீங்க சொலறத எல்லாம் ஞாபகம் வச்சுப்போம் சார்”.
“நன்றி தம்பி”.
மாணவன் சொன்னத மீண்டும் நினைவுக்கு கொண்டுவந்தேன்..
ஆமாம், நீங்களே பாத்து இருப்பீர்கள், நிறையபேர் சைக்கிள்ள டபுளஸ் அடிக்கும் போது, பின்னால உடகாரப்போகின்ற நபர் சைக்கிள் ஓடும் போது தான் ஏறுவார். அப்பத்தான் வண்டிய ஓட்டறவருக்கு எந்த சிரமும் இருக்காது.
இதுக்கு காரணம் உராய்வு குறைவா இருப்பதால் வண்டி வேகமாக ஓட்டமுடியும். 
சொல்லிப்பாருங்க, அவர் கிட்ட ஏம்பா இப்படி பணறேன்னு?
அவர் நம்மள பார்த்து, “”லூசா சார் நீங்க?” அப்படின்னு கேட்பார் இல்லையா?
ஆக உராய்வு ஓட்டத்தை தடை செய்கிறது. 
அப்ப இவன் வில்லன் தானே!!!!
இன்னொரு சம்பவம்!!!!
வில்லன் ஹீரோயினை காரில் கடத்தி சென்று கொண்டிருக்கிறான். பின்னால போலீஸ் துரத்திக்கொண்டு வருது. காருக்கு முன்னால் போய் போலீஸ், வில்லன் வண்டிய நிறுத்தச் சொல்லுது. வேறு வழியில்லாமல் வில்லன் பிரேக்கை அழுத்த கார திடிரென நிறுத்தப்படுகிறது.
கொஞ்சம் முன்னால யோசியுங்க.
எந்த தைரியத்தில போலீஸ் வில்லன் காருக்கு முன்னால போறது!!
உராய்வு  இருக்கும், பிரேக்க பிடிச்சு கார நிறுத்திடலாம என்ற தைரியத்தில் தானே!!!
ஆக உராய்வு ஹீரோ தானே!!!!
அப்ப உராய்வு விசை ரெண்டு வித்ததில் செயல்படுவது இல்லையா?
சில இடங்களில் தேவைப்பட்டது, சில இடங்களில் தேவைப்படல.
அப்படின்னா “உராய்வு” ங்கறது என்னங்க?
இயற்பியல்ன்னு, அல்லது பிஸிகஸ்ன்னு சொலறோமே அதுல நியூட்டன்   சும்மா இல்லாம மூணு விதிய சொல்லி இருக்கார். 
வாழ்க்கையே அதுல தாங்க இருக்கு!!!!
அதுல முதல் விதி, “புற விசை செயல்படாத வரை நிலையா இருக்கும் பொருள் நிலையாகவும், இயங்கும் பொருள் இயங்கிக்கொண்டும் இருக்கும்”
அப்படின்னு சொல்லிட்டாரு.
எவ்வளவு அருமையான விதி பாருங்க!!!
ஆமாங்க, வச்சது வச்ச இடத்துல இருக்கும், போய் கொண்டே இருக்கும் பொருள் போயக்கொண்டே இருக்கும்.
கொஞ்சம் சந்தேகம் வரதா?
எங்க சார், அந்த மாதிரி எல்லாம் எங்க சார் நடக்குது, அப்படின்னு சொல்லத் தோணுதா?
இதுல நடுவுல என்னவோ “புறவிசை” அப்படின்னு என்னவோ சொல்றாறே?
“புறவிசை” அப்படின்னு ஒரு கொக்கிப்பிடி போட்டு இருக்கார் பாருங்க!!!!,
என்னய்யா அதுல “கொக்கிப்பிடி”?
கொஞ்சம் பொறுங்க, உடனே சொல்லிட்டா எப்படி?
ஒரு ஸஸ்பென்ஸ்??

Tuesday, January 30, 2018

நான் உன் நிழல்!!!!!!!



நான் உன் நிழல்!!!!!!!
“நான் உன்னுடைய நிழலா இருப்பேன்”
“நீ நில்லு சொன்னா நிப்பேன், நடன்னு சொன்னா நடப்பேன்”
வீர வசனம் எல்லாம் மனைவியிடம் கணவன் கல்யாணம் ஆன புசுல  சொல்லுவான். ஆனா அப்படி இருப்பானான்னு பாத்தா ரொம்ப குறைவு தான்.
ஆனா அப்படி உன்னுடைய நிழலா இருப்பேன்னு சொல்ற ஒரே ஆள் சந்திரன் தான்.
நம்ம ப்ரண்டு சந்திரன் இல்லீங்க.
பின்ன யாருங்க?
அதாங்க, பூமிய விடாம சுத்திண்டு வர சந்திரன் தாங்க!!!
பூமியின் நிழலா இருக்கும் எப்பவுமே!,!!
பூமிக்கும், நிலவுக்கும் இடையேயான தொலைவு, கிட்டத்தட்ட, 3.84 லட்சம் கி.மீ.,ன்னு சொலறாங்க.  பூமியின் ஒரு பக்கம் சூரியனும், மறுபக்கம் சந்திரனும், ஒரே நேர் கோட்டில் வரும் நிகழ்வுகள், ஆண்டுக்கு ஒரு முறையேனும் நடக்கும்
'தானாக ஒளியை வெளியிடும் சக்தி, நிலவுக்குக் கிடையாது; தன் மீது விழும் சூரிய ஒளியைத்தான், அது பிரதிபலிக்கிறது. இதத்தான் நாம சாதாரண நாட்கள்ள சந்திரனின் வெவ்வேறு நிலைகளா பார்க்கிறோம்.
ஆனா
சந்திர கிரகணம் என்பது, சூரியனுக்கும், நிலவுக்கும் இடையே, பூமி வரும் போது ஏற்படுகிறது. இதனால், சூரியன் - பூமி - நிலவு ஆகியவை நேர் கோட்டில் வரும்போது, சூரியனின் ஒளி, நிலவின் மீது படாத நிலை ஏற்படுகிறது. அதாவது பூமியின் நிழல்  சந்திரன் மீது விழும்.
இதை தான், சந்திர கிரகண நிகழ்வு என்கிறோம்.
படத்தப் பாருங்க புரியும்.








முதல் படத்தில் பூமியின் நிழல் முழுதுமா சந்திரனல விழறதினால அது முழு சந்திர கிரஹணம். இரண்டாவது படத்துல் பூமியின் நிழல்  பாதி விழறதுனால அது பாதி கிரஹணம்ன்னு சொல்லுவாங்க.
வருஷத்துக்கு ஒரு தடவையாவது இந்த நிகழ்வு நடைபெறலாம்.
இந்த வருஷம் ஸ்பெஷல்.!
ஏன்னா?
:1. ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவு, வந்தா அத 'புளு மூன்' என, அழைக்கப்பாங்க. அபூர்வமாக இந்த நிகழ்வு ஏற்படுவதால், இப்படி அழைக்கப்படுகிறது
2. நிலவு நீல நிறத்தில் தெரியும் எனக் கருத வேண்டாம்; அப்படி இருக்காது. விண்வெளியில் உள்ள மாசை பொறுத்து, இன்று சந்திரன் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படலாம்.
3. அதோட இல்லாமல் இன்றைக்கு சந்திரகிரஹணமாகவும் அமைந்துவிட்டது.
இது அடிக்கடி நிகழ்வது இல்லை., 152 ஆண்டுகளுக்குப்பின் இன்று நடக்கிறது. இது, உலக அளவில், வட அமெரிக்கா, கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் தெரியும். இந்தியாவில், இன்று மாலை, 5:15 மணிக்கு சந்திர கிரகணம் துவங்குகிறது.
சாதாரணமாக தெரியும் நிலவை விட, 14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் கூடுதல் ஒளியுடனும் இருக்கும்.
எங்கெல்லாம் தெரியும், மற்றும் பல விஷயங்கள் போட்டோவில் காட்டியிருக்கேன்.



பாரக்கத் தவறாதீர்கள். கிரகண சமயத்தில் சாப்பிடலாமான்னு கேட்பது காதுல விழறது. அதப்பத்தி சயின்ஸ் எதுவும் சொல்லாதுங்க
அது உங்க இஷ்டம் !!!


Sunday, December 24, 2017

பந்து தண்ணி போட்டுள்ளதா? இப்படி ஆடுது?





பந்து ஏன் நடனம் ஆடுது? சுத்துது?
வணக்கம் சார, நான் ராமுவின் அப்பா, உங்களின் ஆலோசனைப்படி ராமு சில சோதனைகளை எனக்கு செய்து காட்டினான். அவைகள் நம்ம அறிவைத் தூண்டும் படி இருந்தன. ஆனால் அவைகளுக்கான அடிப்படை காரணம் ஏதாவது இருக்க வேண்டும் அல்லவா, அதைப்பற்றி உங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என உங்களைப் பார்க்க வந்தோம் சார.
வணக்கம் ஐயா, வாருங்கள், உங்கள் சந்தேகங்களை தெளிவு படுத்தும் முன்னர், அதே விதியை பயன்படுத்தும் இன்னும் சிலவற்றை உங்களுக்குச் சொல்கிறேன்.
சொல்லுங்கள் சார.
ஆகாயவிமானம் பறக்கிறதே, அது எதனால்?
நமது தேசியக்கொடி போன்ற பல கொடிகள் பறக்கின்றனவே, அது எதனால்?
ஒரு பேப்பர ஊதுங்க, என்ன நடக்குது, மேலும் கீழுமாக பறக்குதா இல்லையா?
ஒரு குழாயின் வழியே சென்றுகொண்டிருக்கும் திரவம் அல்லது வாயு குறைவான விட்டம் கொண்ட பகுதியில் செல்லும் போது அதன் வேகம் அதிகரிக்கும் என்பது தெரியுமா?
இது மட்டுமா ஆட்டோமைசர் அப்படீங்கற கருவி, அதாவது,ஷேவிங்கிரீம், ஃப்ளிட் அடிக்கிற கருவி, போன்றவைகள் எந்த தத்துவத்தில் வேலை செய்கின்றன.
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். இவைகளுக்கெல்லாம காரணம், பெர்னுலி என்ற விஞ்ஞானி சொன்ன தத்துவம் தான, சார்.
பெர்னுலியின் வாழ்க்கை வித்தியாசமானதுங்க.
1700ல பிறந்து, 1782 இறந்துட்டார். டாக்டரா M,D பட்டம் வாங்கிட்டு கணக்கு, இயற்பியல், போன்ற துறைகளிலும் ஆராய்ச்சி செய்தவர்.. பல ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். தந்தைக்கும் இவருக்கும் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. தந்தை தனக்கு கிடைக்க வேண்டிய பரிசை இவரே பெற்றுக்கொண்டு விட்டார் என்று இவரை வீட்டைவிட்டு அனுப்பிய சம்பவங்கள் உண்டு.
நிறைய ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதியிருந்தாலும், இவர் மருத்துவராகவும் இருந்ததால், ரத்த ஓட்டம் மற்றும் அழுத்தம்., அவைகளுக்கு இடையே உள்ள தொடர்பை அதிகமாக ஆராய்ந்தார். இதுக்குன்னு அவர் என்ன பண்ணார் தெரியுமா, திரவம் பாயந்துகொண்டிருக்கும் குழாயின் பக்கவாட்டில சின்ன துவாரம் போட்டு ஒரு ஸ்டராவ சொருகி அதனால் திரவத்தின் உயரத்துக்கும் அழுத்தத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன என்பதைக் கண்டுபிடித்தார் என்றால் பாரத்துக்கோள்ளுங்கள். இந்த உபாயம் இன்னும் சில இடங்களில் பயனபடுத்துறாங்களாம்.

இது மாதிரி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
அது சரி, பெர்னுலி என்ன சார் சொன்னாரன்னு நீங்க கேட்பது காதுல விழறது.
ஒண்ணுமில்லை சார், ஒரு குழாயின் வழியா செல்லும் திரவம் அல்லது வாயு, குறைவான விட்டம் கொண்ட குழாயின் வழியே செல்லும் போது அதன் வேகம் அதிகரிக்கும், அழுத்தம் குறையும்.
அதாவது
“திரவம் அல்லது வாயு ஒரு குழாயின் வழியே வேகமாகச் செல்லும் போது அதன் அழுத்தம் குறையும் மற்றும் நிலை ஆற்றலும் குறையும்”
ஆங்கிலத்தில் that an increase in the speed of a fluid occurs simultaneously with a decrease in pressure or a decrease in the fluid's potential energy.
The principle is named after Daniel Bernoulli 
பெர்னுலி


இதுவே பெர்னுலி தத்துவம் ஆகும் சார்.
இப்ப நான் முன்னால சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து விளக்களாம்.
ஃபனல் உள்ள ஒரு பந்த போடுங்க, கீழ் வழியா ஊதி பந்த வெளியே எடுங்கன்னு சொல்லியிருந்தோம். ஆனா, உங்களாள மட்டுமல்ல எந்தக் கொம்பனாலும் எடுக்க முடியாது, ஏனெனில், பெர்னுலி விதிப்படி, கீழ் வழியா ஊதற காத்து எல்லாம், பந்துனுடைய பக்கவாட்டில் வழியா வெளியே சென்றுவிடுவதால், பந்த வெளியேற்றத் தேவையான அழுத்தம் கிடைக்காத்தால் வெளியே வரல.
ரெண்டாவதா பண்ண சோதனையில, ஒரு ஓட்டை வழியா, காற்று வரும் வழியில பந்த வச்சோம்ன்னா, பந்து சுழன்றுகொண்டு சுற்றத பாத்தோம். இதுல பம்பல இருந்து அவர் காத்து, பந்தின் பக்கவாட்டின் வழியே சென்றிவிடுவதால பந்து அங்கேயே சுழன்று கொண்டிருக்கிறது.
இதையே காத்துக்கு பதிலா அதிக அழுத்தம் கொண்ட தண்ணீர் செலுத்தினாலும், பந்து அங்கேயே டானஸ் ஆடிக்கொண்டிருக்கும்.
இந்தமாதிரி சோதனைகளை வீடுகளில், கொலு சமயத்தில் செயதீங்கன்னா பாக்கறவங்க வியப்படைவாங்க சார்.

இவைகளை எல்லாம் வீடியோவா கொடுத்துள்ளேன் பாருங்க, புரியும். அவர்களுக்கெல்லாம் நன்றிய தெரிவிச்சுக்கிறேன்.
விமானம் iஇறக்கை

பந்து டான்ஸ் ஆடும் காட்சி



special thanks to the video by
https://www.youtube.com/watch?v=HZClP-m9g24