Wednesday, September 1, 2021

ஆவியாதல்

ஆவியாதல்,  குளிர்தல் நிகழ்ச்சி ஆகும்.

"என்ன தம்பி இப்படி உனக்கு வேர்க்கிறது?"
"ஒண்ணுமில்லை சார், டாக்டர், சுகர் குறையணும்ன்னா தினம் நாலு கிலோமீட்டராவது ஓடணும்ன்னு சொல்லியுள்ளார். அதுக்குத்தான் ஓடிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கேன். அதனாலே தான் இப்படி வேர்த்து இருக்கு."
"உனக்குத் தெரியுமா தம்பி, வேர்வையை போக்கிறதுக்கு ஒரு சுலபமான வழி இருக்கு."
"விசிறிண்டா வேர்வையேல்லாம் சுலபமா போயிடும் சார். இருங்க விசிறி எடுத்துண்டு வரேன்".
"அதெல்லாம் வேண்டாம் தம்பி. போய் ஃபேனுக்கு அடியில் கொஞ்ச நாழி நின்னு பாரு."
"ஆமாம் சார், என்ன சார் இப்படி குளிர்ச்சியா  இருக்கு,  விசிறிண்டா கூட இப்படி கூலா இருக்காது போல!!!"
"இதுக்கு பேர் "ஆவியாதலால் குளிர்ச்சி" 
(Evoporation means temperature falling)
என்பார்கள். அதாவது எங்கெல்லாம் ஆவியாவதல் நடக்கிறதோ அங்கெல்லாம் குளிர்ச்சி நடக்கும். காரணம் என்னவென்றால் திரவ நிலையில் உள்ள தண்ணீர் (வியர்வை), ஆவியாக வேண்டுமெனில் அது அருகாமையில் உள்ள (உடம்பு) இடத்துல இருந்து வெப்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் அந்த இடத்தின் வெப்பநிலை குறையும். எனவே உடலில் இருந்து வெப்பம் எடுப்பதால் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சியா உணர்கிறோம்."
" ஆமாம் சார் நீங்க சொல்றது சரிதான் சார். இத்தனை நாள் காரணம் தெரியாம இருந்தது."
"அதுக்குத் தான் பிசிக்ஸ் படிக்கணும், தெரியுதா?"

"

Sunday, August 15, 2021

கோபுரங்களின் உள்ளே என் குளிர்ந்த காற்று வீசுகிறது.

ராஜ கோபுரத்தின் உள்ளே ஏன் 
குளிர்ச்சியாக உள்ளது?

ராஜகோபுரத்துக்கு அடியில என்ன இவ்வளவு பேர் கூட்டமாக உட்காந்து இருக்காங்க!. மனைவிக்கு சந்தேகம்.
கேட்டுத்தான் பாப்போமேன்னு தீர்மானம் பண்ணிட்டாங்க போல.
"என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்களேன். இவ்வளவு குளிர்ந்த காத்து உங்க வீட்டு ஏசியுல கூட கிடைக்காது!!!"
இது உட்காந்து இருப்பவரின் பதில்.
"ஆமாம், நின்னுண்டு இருக்கிற கொஞ்ச நேரத்துலேயே இவ்வளவு கூலா காத்து வீசுது பாருங்க அத்தான்" 
மனைவியும் நானும் ராஜ கோபுரத்தின் அருகே இருக்கும் 10 ரூபாய் கடையில் சாமான்கள் வாங்க வந்தபோதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்தது.  அதுல தான் என் மனைவி, இந்த கூலான விஷயத்தை பார்த்துட்டு,
"அது என்ன எல்லா ஊர் கோபுரத்துக்கு அடியிலும் அவ்வளவு பேர் உட்காந்து இருக்காங்கன்னு ரொம்ப நாளாகவே யோசித்துண்டு இருந்தேன். இன்னைக்கு நேராகவே அனுபவிச்சுட்டேன். அது ஏங்க அங்க மட்டும் அவ்வளவு  கூலா இருக்கு?"
"ஆமாம், நீ கேட்கிறதும் சரி தான். எல்லா கோபுரத்துக்கும் அடியிலும்  ஜில்லுன்னு இருக்க ஒரு காரணம் இருக்கு. அதுக்கு J and K effect ன்னு பேர்."
"அப்படின்னா?'
"சொல்றேன்.
ஒரு வாயு அதிக அழுத்தமுள்ள இடத்தில் இருந்து குறைவான அழுத்தமுள்ள இடத்தை நோக்கி பயணிக்கும் போது அதன் வெப்பநிலை குறையும். இதுவே ஜூல்-கெல்வின் விளைவின் தத்துவம். (முழுமையாக படிக்க கூகுளில் தேடவும்)
இது தான் கோபுரங்களின் உள்ளே நடக்கிறது.
கோபுரத்தின் வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் போது அழுத்த வித்தியாசம் ஏற்பட்டு வெப்பநிலையைக் குறைக்கிறது. 
அதனால் தான் கோபுரங்களின் உள்ளே குளிர்ந்த காற்று வீசுகிறது.புரிகிறதா?"
"புரிஞ்சுடுத்துங்க."

Thursday, June 4, 2020

சமையல் அறையில் சங்கீதம்????

சமையல் அறையில் சங்கீதம்!!!!
என்னய்யா தலைப்பு புதுசா இருக்கு!
சமையல்கட்டுல எப்படியப்பா பாட்டு வரும்?
ஓ, நீங்க பால் காச்சுற போது பாத்திரத்துலேர்ந்து  ஒரு விசில் சத்தம் வருமே, அதச் சொல்றீங்களா?
அதுவும் உண்டு, அதோட சமையல் பண்ற குக்கரும் ஒரு விசில் கொடுக்குமே, அதையும் சேர்த்துத் தாங்க சோல்றேன். கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பாத்திரங்கள்,கரண்டி மற்றும் இன்னபிற பொருட்கள் பறக்குமே, அந்த சமயத்துல வர சத்தம் கூட சங்கீதம் மாதிரி தான் இருக்கும் இல்லையா? யாருக்கு சங்கீதமா இருக்கும் அப்படீங்கிறது யார் மேலே கரண்டி விழறதப் பொறுத்து இல்லையா?
அதனால் தான் தலைப்ப அப்படி வச்சேன்  
சமையல் அறையில் பிஸிக்ஸ் எப்படின்னு சொல்லத்தான் இந்த தலைப்பு.

பிஸிக்கல அழுத்தத்துக்கும் வெப்பத்துக்கும் ஒரு தொடர்பு  உண்டுங்க. அதாவது வெப்பத்த கூட்டணும், அதாங்க,  அதிகரிக்கணும்ன்னு வச்சுக்கங்க, அதன் அழுத்தத்தை அதிகரிச்சா வெப்பநிலை கூடும்.அத பாயில் விதிம்பாங்க.
       அழுத்தம்.
உதாரணத்துக்கு தண்ணீரின் கொதிநிலை என்ன?
அதாவது பூமியின் மேற்பரப்புல, நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேடு ஆகும். அப்ப தண்ணீரை ஒரு பாத்திரத்துல வச்சு அத சூடாக்கினா கொஞ்ச நேரத்துல கொதிக்க ஆரம்பிச்சுடும் இல்லையா? அதுக்கும் மேல வெப்பத்த கொடுத்தாக் கூட தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும்.  ஆனா வெப்பநிலை 100 டிகிரியத் தாண்டாது. அப்ப நாம கொடுக்கிற வெப்பம் பூரா தண்ணீர ஆவியாவதற்கு போய்விடும்.அப்ப என்னதான் பண்றது?
அதுக்குத் தான் பாயில் விதி சொல்றதப்படி செய்யணும். அதாவது அறையின் அழுத்தத்தை கூட்டினா, நீரின் வெப்பநிலை 100 டிகிறியவிட அதிகமாகும். அறையின்  அழுத்தத்தை கூட்டறது அவ்வளவு சுலபம் இல்லை. அப்ப கண்டுபிடிக்கப் பட்டது தான் பிரஷர் குக்கர். அதுல என்ன நடக்குது,  உள்ள இருக்சிற வாயுவ வெளிய போகாம மூடி விடுகிறோம். அதனால கீழே வெப்பம் கொடுக்கும் போது உள்ள இருக்கும் வாயுவின் அழுத்தம் அதிகரிக்கிறது. அதனால உள்ளே உள்ள நீரின் கொதிநிலை பாயில் விதிப்படி 100 டிகிறிய விட அதிகமாகி, உள்ளே உள்ள பொருள் சீக்கிரமா வெந்துவிடும் இல்லையா? பிரஷர் ஓரளவுக்கு மேல் தாண்டினா குக்கர் வெடித்துடும் என்பதால, ஓரு வால்வு வைத்து அந்த சமயத்துல உள்ளே உள்ள அழுத்தம் அதிகமா இருக்கிற காற்றை வெளியே தள்ளிடுகிறார்கள்.அத சேப்டி வால்வு என்பார்கள்.
இது தான் குக்கர் வேலை செய்யும் விதம். இப்ப பாத்தீங்களா பிஸிக்ஸ் எப்படி அடுப்பங்கரை வரை வந்துள்ளது! !!!
அது மட்டுமில்லைங்க வேறே ஒண்ணும் சொல்லப் போறேன். அத அடுத்த பகுதியில் பாப்போம். 
என்ன சரியா?

Thursday, April 16, 2020

ஒளியின் வேகம் பகுதி 3

வேகமா எதுக்குப் போகணும்?
சில சமயங்களில் வேகம் முக்கியமுங்க. ஒருத்தருக்கு உடம்பு முடியலன்னு வச்சுக்குங்க. அவர ஆஸ்பத்திரிக்கு கூட்டிண்டு போகணுமன்னா, என்ன செயவீங்க? மாட்டு வண்டியிலயா கூட்டிண்டு போகமுடியும். அவ்வளவு தான் எமலோகத்துக்குத் தான் போகணும். அப்பவேறே என்ன பணறது? வேகமா போற ஆம்புலன்ஸ தானே பயன்படுத்தமுடியும். அதுக்குத் தான் வேகமா போகணுமங்கிறது.!
உடம்பில் சக்கரை அதிகமா இருக்கிறவங்களை டாக்டர் தினமும் நாலு கிலோமீட்டருக்கு குறையாம நடங்கன்னு சொல்றாங்க. ஆக வேகம் வாழக்கையில ரொம்ப முக்கியம்.
இதுல என்ன வேடிக்கை என்னன்னா, நாம இருக்கிற சூரியகுடும்பம்த்தல இருக்கிற கிரஹங்கள் சும்மா நிலையா இல்லாம தானும் சுத்திகிட்டு, சூரியனையும் சுத்திகிட்டு குறிப்பிட்ட வேகத்துல வருதுங்க. உதாரணத்துக்கு பூமி தனக்குத்தானே சுத்திக்கிறது மட்டுமில்லைங்க சூரியனையும் சுத்துதுங்க.
பூமி மணிக்கு 1000 மைல் வேகத்துல சுத்துதாம். இதவிட முக்கியம் என்னன்னா சூரிய குடும்பமும் சுத்துதாம். இது மாதிரி பல சூரியகுடும்பம், எல்லாமே வெவ்வேறு வேகத்தில சுத்துதாம்.
என்ன சார் பூமி சுத்துதுங்கிறீங்க, நாம எப்படி சார் அத தெரிஞ்சுக்கிறது. பூமி சுத்தறபோது அதோட நாமும் சேர்ந்து தான்ன சுத்தறோம். அதனால தான்நமக்கு தெரியல. உதாரணத்துக்கு ஒரு பஸ்ல போய்கொண்டிருக்கோம்ன்னு வச்சுக்கங்க, பஸ்ஸுனுடைய வேகத்துக்கு உள்ளே இருக்கிற எல்லாம் அதே வேகத்துல தான போகுது. அது போலத்தான் பூமி சுத்தும் போது அதன் பக்கத்தில் உள்ள பொருடகளும் அதே வேகத்தில சுத்தும்.
இப்ப ஒரு பொருளை மேலே தூக்கி எறியறீங்கன்னு வச்சுக்கங்க, அது என்ன ஆகிறது? கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே வந்துடுது, இல்லையா? ஏன் கீழே வருது? காரணம் பூமி எல்லாப் பொருடகளையும் அதனை நோக்கி இழுப்பதினால தான். அதனை புவிஈரப்பு விசை எனபாரகள். அப்ப பொருடகள் ஈர்ப்பு விசையை விட்டு வெளியே போகணுமன்னா குறிப்பிட்ட வேகத்துக்கு மேல அந்தப பொருளுக்கு கொடுத்தோமன்னா அது பூமியை நோக்கி வராதுல்ல. அந்த வேகத்த, “விடுபடுதிசைவேகம்” எனபாரகள்.
பூமிய பொருத்த அவரை அது மணிக்கு 4000 கிலோமீட்டரகளாக கண்டுபிடித்துள்ளார்கள். அதாவது வினாடிக்கு 11.2 கிலோமீட்டர்களாம்.
இப்படி வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது நம்முடைய வாழ்க்கையிலங்க.

அப்ப வேகத்துக்கு வரையரை இருக்கான்னு நீங்க கேட்பது காதுல விழறதுங்க. அப்படின்னா எதுங்க பெரும திசைவேகம். ஆமாங்க, ஒளி தான் அதிகமான வேகத்துல போகுதாம். நான் சொல்லலைங்க. ஈன்ஸ்டீன் அப்படிங்கிறவர் தான் சொல்லி இருக்கார்ஙக.

வெற்றிடத்தில் ஒளி வேகம் விநாடிக்கு 299,792,458 மீட்டர்களாகும்.இதனை 2.99*108ms−1 அல்லது 3*108ms−1 (வெற்றிடத்தில் மட்டும்) என்றும் கூறலாம்.ஒளியின் வேகம் ஒரு மாறிலி (constant) ஆகும்
இது மட்டுமில்லைங்க, ஒளியின் வேகத்த ஒரு மாறிலியாக வைத்துக்கொண்டு நிறைய கணக்குகள்போட்டு இருக்காங்க. அதேமாதிரி ஒளி ஒரு ஊடகத்தின் வழியா போறதுன்னு வச்சுக்குங்க, அதன் வேகம் குறையுமாம். அதே போல ஊடகத்த விட்டு வெளியே வந்துட்டா மீண்டும் அதே வேகத்துல போகுமாம். எப்படின்னா நீங்க சிமெண்ட தரையில ஓடிண்டு இருக்கீங்கன்னு வச்சுக்குங்க உங்க வேகம் ஒரே சீரா இருக்கமில்லை.திடீரென்று மண் தரைக்குப் போறீங்கன்னு வச்சுக்குங்க, அப்ப உங்க வேகம் என்ன ஆகும், குறையமில்லை. அதே போலத்தான் ஒளியின் வேகமும் ஊடகத்துல போகும்போதுகுறையுது.
மேலும் ஒளியின் வேகம் தான் யாரும் செல்லக்கூடிய மிக அதிகமான வேகம். இதனை ஈன்ஸ்டீன்தன்னுடைய ஒப்புமைக் கொள்கை ( Theory of relativity)
யில் உலகத்துல மிக அதிகமான வேகம் ஓளி என்றுஅறுதியிட்டு சொல்லி இருக்கார்

அண்டத்துல ஒரு கோளுக்கும் அடுத்த கோளுக்கும் இடையே உள்ள தொலைவை இத்தனை ஒளி தொலைவில் என்று தான் சொலவாரகள்.
அதாவது ஒளி ஆண்டுகள் என்ற அலகை வைத்துக்கொண்டிருக்கிறாரகள்.
அதாவது ஒளி ஒரு ஆண்டுக்கு எவ்வளவு தொலைவு செல்லுமோ அதனை ஒரு ஒளி ஆண்டு என்பர்.
ஓராண்டில் ஒளி பயணம் செய்யும் தொலைவு (9.4607 × 10¹² கி.மீ) ஒளியாண்டு. எதுக்காக சொலறேன்னா, சூரியனிடமிருந்து ஒளி நம்மை வந்தடைய கிட்டத்தட்ட 8.20 நிமிஷங்கள் ஆகிறதாம். அப்படின்னா அது எவ்வளவு தொலைவில் இருக்கும் என்று கணக்குப் போட்டுப் பாரத்துக்கொள்ளுங்க!!!
ஈன்ஸ்டீன் தன்னுடைய ஒப்புமைக் கொள்கையைப் பத்தி சொல்லும்போது ,,
ஒளியின் வேகம் தான் இறுதி வேகம்ன்னு சொன்னவர், மற்றொன்றையும் சொல்லி இருக்கார்.
என்ன தெரியுமா?
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா என்ன நடக்கும்ன்னு வேற சொல்லி இருக்கார். அதுக்கான சமனபாட்டையும் நிறுவி இருக்கார்ன்னா பாத்துக்கங்க!!
ஒருத்தன் ஒளியின் வேகத்துல போனா அவனுடைய நிறை ஈறீலி என்ற மதிப்பை அடையுமாம்.
அது மட்டுமில்லைங்க.,நேரம்குறைபாடு ஏற்படுமாம். அதாவது, நீங்க ஒளியின் வேகத்துல ஒரு ராக்கெட்டுல போறீங்கன்னு வச்சுக்கங்க, உங்களோட வயசு, கீழே நிலையா அருக்கிற ஒருத்தனுடைய வயச காட்டிலும் குறஞ்சு இருக்குமாம். அதாவது ஒளியின் வேகத்துல ஏதாவது ஒரு கிரஹத்துக்கு போய்விட்டு வந்தோம் என்றால், நம்ம வயசு குறைஞ்சு போயிருக்குமாம்.
நல்ல இருக்குல்ல!!!
இந்த ஐடியாவ வச்சுண்டு நிறைய கதைகள் வந்துருக்கு!!!
இன்னும் அந்த ஒளிய வச்சுண்டு நிறைய எழுதலாம்.
பாப்போம் நேரம் கிடைத்தால்!!!!!!!

Sunday, April 5, 2020

ஒளியின் வேகம் பகுதி 2

வேகம் அப்படின்னா என்னங்க?
ஒரு சினிமால வடிவேலுகிட்ட ஒருத்தர் “இசைன்னா என்னன்னு கேப்பாறே?”
அது மாதிரி தாங்க, நான் கேடபதும்.
ஒரு குறிப்பிட்ட தொலைவை கடக்க எத்தனை நேரம் ஆகுதுன்னு பாருங்க. அப்ப தொலைவை நேரத்தால வகுத்து என்ன வருதோ அதாங்க வேகம்ன்னு.  சொலவாங்க.
அதாவது ஒரு மணி நேரத்துல ஒரு வண்டி 50 கிலோமீட்டர் போகுதுன்னு வச்சுக்கங்க, அப்ப அந்த வண்டியின் வேகம 50கி.மீ/மணிக்கு என்று சொலவார்கள். இதையே வினாடிக்கும் மாத்திக்கலாம்.
எதுக்காக வினாடிக்கும மாத்தணும்ன்னா, பிஸிக்ஸ்ல வேகம்ன்னா, இத்தனை வேகம் வினாடிக்கு இத்தனை கிலோமீட்டர் அல்லது மீட்டருக்கு என்று தான் சொலவார்கள்.
ஒவ்வொண்ணுக்கும் இத்தனை வேகத்தில தான் போகமுடியும்ன்னு இருக்குங்க. இப்ப மனிதன் நடக்கறான்னு வெச்சுக்கங்க, எவ்வளவு வேகமா போகமுடியும். 
ஓட்டப்பந்தய வீரர்கள் தான் வேகமா ஓடுவாங்க. அவங்களும் பந்தயத்தில் தான் தங்களின் வேகத்தைக் காட்டுவாங்க. ஹுசைன் போல்ட் அப்படிங்கிற பந்தய வீர்ர மணிக்கு 29-30 கிலோமீட்டர் வேகத்துல போவாராம். மத்தவங்களோட வேகம் மணிக்கு 4 அல்லது 5 கிலோமீட்டர் தான் இருக்கும்.
ஒரு கதை கேட்டு இருப்பீங்க, அதாங்க ஆமைக்கும் முயலுக்கும் ஓட்டப்பந்தயம் வச்சாங்க. அதுல எப்படி வேகமா போற முயல் தோத்து ஆமை ஜெயிக்கும். அது முயலின் ‘இயலாமை” தான் காரணம்.
இது மாதிரி, வேகமா போற பொருடகளின் லிஸ்ட் பாத்தோம்ன்னா,
ஜப்பான்காரங்க மிக வேகமா போற ரெயில், அதாங்க புல்லட் ரயில், மணிக்கு 300-400 கிலோமீட்டர் வேகத்துல போற மாதிரி தயார் பண்ணிட்டாங்க.

இதவிட வேகமா போகணும்ன்னா, ராக்கெட்டுகளைத் தான் சொல்லணும். பல நாடுகள் தங்களுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகமா போற ராக்கெட்டுகளை தயார் செய்து விண்ணுக்கு அனுப்பிக் கொண்டு இருக்காங்க.
இன்னும் பாப்போம் அடுத்த பகுதியில்!!!!!

Friday, March 27, 2020

 ஓளியின் வேகம்.
“என்னங்க இவ்வளவு வேகமாப் போறீங்க! அங்க பாருங்க பக்கத்தில, சைக்கிள்ள போற எட்டாங்கிளாஸ் படிக்கிற பையன, உங்க வண்டிய ஓவரடேக் பண்ணிண்டு போறான். வெக்கமா இருக்குங்க. கொஞ்சம் வேகத்த கூட்டுங்க”.
ஸ்கூட்டியில் 25 கிலோமீட்டர் வேகத்தில போயக்கொண்டு இருக்கும் என்னிடம் பின்னாடி வசதியா உக்காந்துண்டு வரும் என் மனைவி புலம்பல் தான் அது..
இதுக்கெல்லாம் அசறு வேனா நான். இப்படித்தான் ரெண்டு வருஷத்துக்கு முன்னால ரோடுல போய்க்கொண்டு இருக்கும் போது, இத்தனைக்கும மணிக்கு 20 கிலோமீட்டர வேகத்தை தாண்டாத என்னை நோக்கி, எங்கிருந்தோ ஒரு குறுக்குச் சந்திலிருந்து ஒரு சின்னப் பையன் வந்து மோதி பதினைந்து நாள் ஆஸ்பத்திரியில் எனக்கு “ஸிருஷை” (கூடவே இருந்து ஆகாரம், மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொடுத்தல், நான் தூங்காம இருக்கும் போது அவங்களும் தூங்காம இருக்கிறது போன்றவைகளைத் தான், அப்படிச் சொலவாங்க) செயததை மறந்துவிட்டாரகள் போல.
ஆமாங்க, வேகம் முக்கியமுங்க! அதவிட விவேகமும் தாங்க!
அது சரி, வேகத்த கூட்டினிங்களான்னு கேட்பது காதுல விழறது.
அது எப்படீங்க முடியும?
அஅந்தந்த இடத்தில இவ்வளவு வேகத்துல தான் போகணும், அப்படின்னு போர்டு வச்சுருக்காங்க இல்லையா?
நான் முன் ஜாக்கிறதை முத்தண்ணாங்க!
எதுக்கு இத்தனை பீடீகை?
ஆமாங்க, பிஸிக்ஸ் இவ்வளவு ஈஸியா என்ற தலைப்பில வேகத்தப் பத்தி லகுவா சொல்லாமன்னு இருக்கேன், அதுக்குத்தான் இத்தனை முத்தாய்பு!!!
சரி, அடுத்த பகுதியில பாப்போம். வேகதப் பத்தி!,
என்ன சரியா?

Wednesday, December 18, 2019

என்ன எடைய குறைக்கணும்ன்னா இங்க போகணுமா?
போன பகுதியில நம்மளுடைய எடையை எப்படி குறைக்கறது.
அப்படின்னு கேள்வியோட நிறுத்தி இருந்தேன்.
இப்ப அதப் பத்தி மேல பாத்துட்டு, கடைசியாக அந்தக் கேளவிக்கான பதில பாப்போம்!!!
தல மேல ஆப்பிள் விழுந்து கலங்கி உக்காந்து இருந்தார் ஒருத்தர்னு முந்தின பகுதியில முடிச்சு இருந்தேன்.
யார் இது?
வேற ஒத்தரும் இல்லீங்க. சர் ஐசக் நியூட்டன் தாங்க அவர்.
மளமளவென வேலையில் இறங்கினார். மூணு விதிகளை உருவாக்கினார்.
அவைகள் தான் நியூட்டனின் “இயக்கவியல் விதிகள்” என்று சொல்லப்படும் “NEWTONS LAW OF MOTION”, ஆகும்.
அதப்பத்தி நாம முன்னாலயே பாத்து இருக்கோம்.
மேலே போன பொருள் ஏன் கீழே விழரது? இந்தக் கேள்விக்கு பதிலைத் தேடினதுல கிடைச்சது தான், பூமி எல்லாப் பொருட்களையும் தன்னை நோக்கி இழுத்துக் கொள்கிறது என்கிற புவிஈர்ப்பு முடுக்கம் எனும் தத்துவம். அது மட்டுமில்லைங்க, சூரியன் மற்றும் அதைச் சுற்றி வரும் எல்லா கிரஹங்களுக்கும் இது பொருந்தும் என்றும் சொன்னார்.
இப்ப உலகத்துல உள்ள நாடுகள் இவருடைய தத்துவத்தைப் பயன்படுத்தி தான் ராக்கெட்டுகளை ஏவுகிறாரகள் என்றால் பாத்துக்கங்க!

இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய, ‘g’, (acceleration due to gravity)எனபது தான்.
போன பகுதியில அதப்பத்தி கொஞ்சம் பாத்தோம். அதுல “நிறை”, “எடை” ரெண்டும் ஒண்ணா அல்லது வெவ்வேறா, என்ன வித்தியாசம் போன்றவைகளைப் பத்தி பாத்தோம். ரெண்டும் இதுல முக்கியமானது என்னவென்றால், ‘புவிஈர்ப்பு முடுக்கம்’, என்று சொல்லக்கூடிய பூமி எல்லாப் பொருட்களையும் ஈர்க்க க்கூடிய தன்மை என்ற விஷயம்.
அதுல தான் எடை என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இருக்காது, மாறக்கூடியது என்று பாரத்தோம். இடத்துக்கு இடம் மாறும்ன்னு சொன்னேன்.
 

ஆமாம், பூமியின் மேற்பரப்புல இருக்கும் எடை, பூமியின் மையத்தை நோக்கிச் செல்லும் போது மாறுமாம். கீழே ஒரு சமன்பாடு கொடுத்துள்ளேன் பாருங்க.
அதாவது, ‘g ங்கிறது பூமியின் மேற்பரப்புல இருக்கும் புவிஈர்ப்பு முடுக்கம்ன்னு வச்சுக்கங்க, g1’ங்கிறது பூமியின் கீழே ‘h’மீட்டர் ஆழத்தில் உள்ள புவிஈர்ப்பு முடுக்கம் எனக் கொண்டால், அத இரண்டையும் இணைக்கும் சமன்பாடு,
                             g1=g(1-h/R)  
என கண்டுபிடித்துள்ளார்கள். இதுல என்பது, பூமியின் ஆரம். எனவே பூமியின் மேற்பரப்பில் இருந்து கீழே இறங்க இறங்க, g மதிப்பு குறைந்து கொண்டே வரும். மதிப்பு R  மதிப்புக்கு சம்மாகும் போது g1 சுழியாகும். அதாவது புவிஈர்ப்புமுடுக்கம் சுழியாகும்.
அப்படின்னா, எடை என்னவாகும்?
ஆமாம், நீங்க கேட்பது சரிதான். பூமியின் மையத்துக்கு போனா நமக்கு எடை கிடையாது!!!!
ஆஹா, நல்லது பண்ணீங்க, நம்ம வீட்டுக்காரர், எடைய குறைக்கிறேன் பேர்வழின்னு பாவம் நடக்கிறது, ஆசனம் அது இதுன்னு என்னத்தையோ பண்ணிண்டு இருக்கார். தொப்பை ஒண்ணும் குறைஞ்ச மாதிரி தெரியல!! பேசாம அவர பார்சல் பண்ணி பூமியின் மையத்துக்கு அனுப்பிடலாமன்னு சொல்லுங்க!!!!
இது எப்படி இருக்கு பாருங்க?
இத விட இண்ணொண்ணு இருக்குங்க!
நமக்கு பிடிக்காத ஆள, என்ன பண்ணலாம்ன்னா, பூமியின் மையத்த நோக்கி ஒரு குழி வெட்டி, அதுக்கள்ள தள்ளிட்டா, அவன் மேலுக்கும் கீழுக்குமா ஆடிக்கொண்டு இருப்பானாம்.
அதப்பத்தி உள்ள ஒரு வீடீயோவப் பாருங்க!!!

https://www.universetoday.com/123591/what-if-we-dug-a-tunnel-through-the-earth/