Wednesday, September 1, 2021

ஆவியாதல்

ஆவியாதல்,  குளிர்தல் நிகழ்ச்சி ஆகும்.

"என்ன தம்பி இப்படி உனக்கு வேர்க்கிறது?"
"ஒண்ணுமில்லை சார், டாக்டர், சுகர் குறையணும்ன்னா தினம் நாலு கிலோமீட்டராவது ஓடணும்ன்னு சொல்லியுள்ளார். அதுக்குத்தான் ஓடிட்டு வந்து ரெஸ்ட் எடுத்துண்டு இருக்கேன். அதனாலே தான் இப்படி வேர்த்து இருக்கு."
"உனக்குத் தெரியுமா தம்பி, வேர்வையை போக்கிறதுக்கு ஒரு சுலபமான வழி இருக்கு."
"விசிறிண்டா வேர்வையேல்லாம் சுலபமா போயிடும் சார். இருங்க விசிறி எடுத்துண்டு வரேன்".
"அதெல்லாம் வேண்டாம் தம்பி. போய் ஃபேனுக்கு அடியில் கொஞ்ச நாழி நின்னு பாரு."
"ஆமாம் சார், என்ன சார் இப்படி குளிர்ச்சியா  இருக்கு,  விசிறிண்டா கூட இப்படி கூலா இருக்காது போல!!!"
"இதுக்கு பேர் "ஆவியாதலால் குளிர்ச்சி" 
(Evoporation means temperature falling)
என்பார்கள். அதாவது எங்கெல்லாம் ஆவியாவதல் நடக்கிறதோ அங்கெல்லாம் குளிர்ச்சி நடக்கும். காரணம் என்னவென்றால் திரவ நிலையில் உள்ள தண்ணீர் (வியர்வை), ஆவியாக வேண்டுமெனில் அது அருகாமையில் உள்ள (உடம்பு) இடத்துல இருந்து வெப்பத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால் அந்த இடத்தின் வெப்பநிலை குறையும். எனவே உடலில் இருந்து வெப்பம் எடுப்பதால் உடல் வெப்பம் குறைந்து குளிர்ச்சியா உணர்கிறோம்."
" ஆமாம் சார் நீங்க சொல்றது சரிதான் சார். இத்தனை நாள் காரணம் தெரியாம இருந்தது."
"அதுக்குத் தான் பிசிக்ஸ் படிக்கணும், தெரியுதா?"

"

Sunday, August 15, 2021

கோபுரங்களின் உள்ளே என் குளிர்ந்த காற்று வீசுகிறது.

ராஜ கோபுரத்தின் உள்ளே ஏன் 
குளிர்ச்சியாக உள்ளது?

ராஜகோபுரத்துக்கு அடியில என்ன இவ்வளவு பேர் கூட்டமாக உட்காந்து இருக்காங்க!. மனைவிக்கு சந்தேகம்.
கேட்டுத்தான் பாப்போமேன்னு தீர்மானம் பண்ணிட்டாங்க போல.
"என்ன சார் அப்படிக் கேட்டுட்டீங்க. கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்களேன். இவ்வளவு குளிர்ந்த காத்து உங்க வீட்டு ஏசியுல கூட கிடைக்காது!!!"
இது உட்காந்து இருப்பவரின் பதில்.
"ஆமாம், நின்னுண்டு இருக்கிற கொஞ்ச நேரத்துலேயே இவ்வளவு கூலா காத்து வீசுது பாருங்க அத்தான்" 
மனைவியும் நானும் ராஜ கோபுரத்தின் அருகே இருக்கும் 10 ரூபாய் கடையில் சாமான்கள் வாங்க வந்தபோதுதான் மேற்கண்ட சம்பவம் நடந்தது.  அதுல தான் என் மனைவி, இந்த கூலான விஷயத்தை பார்த்துட்டு,
"அது என்ன எல்லா ஊர் கோபுரத்துக்கு அடியிலும் அவ்வளவு பேர் உட்காந்து இருக்காங்கன்னு ரொம்ப நாளாகவே யோசித்துண்டு இருந்தேன். இன்னைக்கு நேராகவே அனுபவிச்சுட்டேன். அது ஏங்க அங்க மட்டும் அவ்வளவு  கூலா இருக்கு?"
"ஆமாம், நீ கேட்கிறதும் சரி தான். எல்லா கோபுரத்துக்கும் அடியிலும்  ஜில்லுன்னு இருக்க ஒரு காரணம் இருக்கு. அதுக்கு J and K effect ன்னு பேர்."
"அப்படின்னா?'
"சொல்றேன்.
ஒரு வாயு அதிக அழுத்தமுள்ள இடத்தில் இருந்து குறைவான அழுத்தமுள்ள இடத்தை நோக்கி பயணிக்கும் போது அதன் வெப்பநிலை குறையும். இதுவே ஜூல்-கெல்வின் விளைவின் தத்துவம். (முழுமையாக படிக்க கூகுளில் தேடவும்)
இது தான் கோபுரங்களின் உள்ளே நடக்கிறது.
கோபுரத்தின் வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் போது அழுத்த வித்தியாசம் ஏற்பட்டு வெப்பநிலையைக் குறைக்கிறது. 
அதனால் தான் கோபுரங்களின் உள்ளே குளிர்ந்த காற்று வீசுகிறது.புரிகிறதா?"
"புரிஞ்சுடுத்துங்க."