Monday, November 27, 2017

பந்தயம்

“ராமு, என்ன பண்ணிண்டு இருக்கே?”
என் பையன் ஃபனல், பந்து இவைகளை வைத்து என்னவோ பண்ணிண்டு இருந்தான்,அவனைப் பார்த்துதான் கேட்டேன்.
“அப்பா,எங்க ஆசிரியர் ஒரு பந்தயம் வச்சு இருக்கார்,அதுல யாரு ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு 10000 ரூபா பரிசாக தரேன்னு சொல்லி இருக்கார் அப்பா?”
“என்னடா அது பந்தயம்?”
“ஒண்ணுமில்ல அப்பா, ரொம்ப சிம்பிள் தான், நான் வச்சுண்டு இருக்கேனே ஃபனல், அதுல ஒரு டேபிள் டென்னிஸ் பபந்த போட்டு, கீழ இருக்கிற குழாயின் வழியா ஊதணும்.அப்படி பண்ணி பந்த ஃபனலேரந்து வெளியே தள்ளிடணும். இவ்வளவு தான் அப்பா”.
“படம் பாருங்க அப்பா”
“ஆமாம் ராமு, ரொம்ப ஈசீயா இருக்கும் போல இருக்கே, கையால் பந்த எடுக்க கூடாதா?”
“கூடாது அப்பா,வாயால் ஊதித்தான் பந்த வெளியே தள்ளனும்.”
“கொண்டா ராமு, நான் ட்ரை பணறேன்.”


















வாயில் குழாய் வைத்து ஊத ஆரம்பிச்சேன். பந்து உருண்டு, கொஞ்சம் மேலே எழும்பியது. ஆனா வெளியே வரல. கொஞ்சம் வேகமா ஊதீனா வராதா என்ன, பண்ணிட்டாப் போச்சு.
ஹூஹூம், ஃபனலுக்குள்ளயே சுத்தறது வெளியே வரமாட்டேங்குது.
“ராமு, பசை கிசை தடவி இருக்கியா என்ன?”
“என்னப்பா நீங்க, பந்து ஈசீயா கையால எடுக்கமுடியறதான்னு பாத்துட்டு பேசுங்கள் அப்பா”.
“ஆமாம், ஈசீயாத்தான் எடுக்கமுடியுது, அப்ப ஏன் பந்து வெளியே வரமாட்டேங்குது, இன்னும் கொஞ்சம் பலமா ஊதினா வராமலா போயிடும்.”
என்னடா இது சோதனை, எவ்வளவு பலமா ஊதீனாலும் பந்து வெளியே வரமாட்டேங்குது?
பந்து வெளிய வராதாங்க?
நம்மள பாத்து கேட்கிறார், பந்து வெளியே வருமான்னு நீங்களும் செஞ்சு பாருங்களேன், ரொம்ப சிம்பிள் தானே, வீட்டுல தான் படத்துல பாக்கறது எல்லாம் இருக்குமே.
பந்து வெளியே வந்தவுடன் எனக்கு ஒரு ஃபோன் பண்ணுங்க, ஆசிரியர் கிட்ட பணத்தை வாங்கி உங்க கிட்ட கொடுக்கத் தான்.