Sunday, February 12, 2017

என்ன சாப்பிட வேண்டாமா?




என்ன சாப்பிட வேண்டாமா?

என்ன தலைப்பு இது, சாப்பிட வேண்டாமான்னு.

அப்புறம் எப்படி ஐயா காலம் தள்ளறது?

நீங்க கேட்கிறது காதுல விழறது.

நான் சொல்லவறது என்னன்னா சாப்பிட்டா ஆற்றல் கிடைக்கும், சாப்பிடாமலேயே ஆற்றல் கிடைக்கும்ன்னு சொல்ல வரதா நீங்க நினைக்க வேண்டாம்.

ஒரு உதாரணத்துக்காக அத சொன்னேன். எதுக்கு சொல்றேன்னா, விஞ்ஞானிகள் ராக்கெட் ஏவுகிறார்கள்  ராக்கெட் ஏவுற விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் ராக்கெட் எடுத்துச் செல்லும்துணைக்கோளை விண்ணில் செலுத்துகிறார்கள்.ஏவக்கூடிய துணைக்கோள்கள் எந்த வேகத்தில

வெளியே வருதோ அதே               வேகத்திலேயே பயணப்பட்டுக் கொண்டிருக்கும். ராக்கெட் செலுத்தும் வரை தான் எரிபொருள் பயன்படுத்தப்படும், அதற்குப் பிறகு எந்த எரிபொருளும் தேவை இல்லை.(அது என்னதான் வேகம்ன்னு கேட்பது காதுல விழறது. அதப்பத்தி தனியா பின்னர் பாப்போம்.)அதத்தான் நான் ஆகாரம் வேண்டாம்ன்னு தலைப்பு போட்டு இருந்தேன்.

ஆமா, கொடுத்த வேகத்தோட தொடர்ந்து போய்க் கொண்டு இருக்கும். வேகம் குறையாதான்னு கேட்பது சரிதான்.

இந்த ஐடியா யார் சொன்னான்னு தெரியனுமா?

வேறே யாரு? நியுட்டன் தான்!!!!

அவர் முன்று விதிகளை சொல்லி இருக்கார். அதுலே இங்கு பயன்படுத்துவது முதல் விதி.

                       An object at rest stays at rest and an object in motion

                       stays in motion with the same speed and in the

                       same direction unless acted upon by an unbalanced force



அது என்னய்யா முதல் விதி?

“புற விசைகள் ஏதும் செயல்படாத வரையில், நின்று கொண்டு இருக்கும் பொருள் நின்று கொண்டும், நகர்ந்து இருக்கும் பொருள் நகர்ந்து கொண்டும் இருக்கும்.”

அதானால் தான் நான் முன்னரே சொன்னமாதிரி ராக்கெட்டில் இருந்து செலுத்தப்பட்ட துணைக்கோள் அதே வேகத்தோடு செல்லுகிறது என்பது முதல் விதியின் உதாரணம்.

வேறே உதாரணம் சொல்லன்னுன்னா, பூமி மற்றும் மற்ற கிரஹங்கள் ஒரு நிமிஷம் கூட நேரம் மாறாம சுத்திண்டு இருக்க காரணம் இதே விதி தான் காரணம்.

அப்ப நிக்கிறவங்க நின்னிண்டே தான் இருக்கனுமா? ஆமாங்க, அதுதான் விதி.

அப்படின்னா ஒரு பந்தை உருட்டி விட்டா கொஞ்ச தூரம் போயிட்டு ஓடாம நின்னிடுது?

நல்லா கேட்டிங்க. நீங்க ஒட்டி விடற பந்து, எந்த தரையிலே ஓடுதுங்கறதப் பொறுத்து, கொஞ்ச தூரமோ அல்லது அதிக தூரமோ ஓடும், அப்புறம் நின்னிடும். அங்க தான் நியுட்டன் சொன்னாருல்ல, புறவிசைன்னு,, அது தடுப்பதால தான் நின்னிடுதுங்க.

அதுமாதிரி தான் நீங்க உக்காந்து இருப்பதை உக்காரவிடாமல் தடுப்பதும், ஓடிக்கொண்டு இருக்கும் உங்களை ஓடவிடாமல் தடுப்பதும் அந்தப் புறவிசை தான்.




இங்க கொடுத்த லிங்க கிளிக் பண்ணிப் பாருங்க. முதல் விதியை பிரமாதமா சொல்லி இருக்காங்க.

அந்தப் புறவிசை நல்லவனா கெட்டவனா/

அந்தப் புறவிசை வேணுமா வேண்டாமா?

இதெல்லாம் அந்த முதல் விதியோட சித்து விளையாட்டு!!!!!

அடுத்த எபிசோடுக்கு தயாராகுங்க, பிசிக்ஸ் ஈசியா கத்துக்கலாம்

Friday, February 3, 2017

என்ன காபி சூடா இருக்கா?


என்ன காபி சூடா இருக்கா?

பிசிக்ஸ் அவ்வளவு ஈசியான்னு போன பதிப்புல கேட்டு அதுக்கு பதிலா ஒரு விஷயம் விளக்கி இருந்தேன். அதே போல இப்பவும் ஒரு விஷயம் சொல்லலாம்ன்னு இருக்கேன்,.

மேல தலைப்பைப் பாத்திக்கிங்கல்ல

ஆமாங்க அதப் பத்திதான் சொல்லப்போறேன்.

அப்பா, அம்மா கொடுத்த காபி ரொம்ப சூடா இருக்கா?

ஆமாம், அதுக்குத்தான் டபரா கொடுத்து இருக்காளே, அதப் பயன்படுத்தி ஆத்திக்கிறேன், நீ ஏண்டா கவலைப் படறே?

அதுக்கு இல்லப்பா, எங்க ஆசிரியர் அதப்பத்தி சொன்னத உன்கிட்ட சொல்லலாம்ன்னு தான் கேட்டேன்.

அப்படி என்னதான் உங்க ஆசிரியர சொன்னார்.

டபரா பயன்படுத்தி ஆத்த வேண்டாம் அப்பா, சும்மா காப்பிய வச்சுண்டு கொஞ்ச நாழி இருந்தாலே அது ஆறிடுமாம், அதோட வெப்பநிலை குறைஞ்சுடுமாம், அதுக்குப் பிறகும் குறையல்லைன்னா மட்டும் ஆத்திக்கலாம்ன்னு சொன்னார் அப்பா.

அதெப்படிடா தானா வெப்பநிலை உடனே குறைஞ்சுடும்?

வெளிநாட்டுக்காரங்க காபி எதுல சாப்பிடறாங்கன்னு நீங்க பாத்து இருப்பிங்க. கப் மற்றும் சாசர் பயன்படுத்துவாங்க இல்லையா? எதுக்காக? கப் காபியை சாசர்ல ஊத்துவாங்க இல்லையா? ஏன்னா, கப்புல இருக்கிற காபியை விட சாசர்ல இருக்குற காபி வேகமா ஆறிடும்ன்னு தான்.

இதெல்லாம் எதுக்கு?

அதாவது காபியோட வெப்பநிலை அறை வெப்பநிலையை இரண்டுக்கும் இரண்டுக்கும் வித்தியாசம் அதிகமாக இருந்தால், காபியின் வெப்பம் வேகமாக குறையும். அதே சமயத்தில் வித்தியாசம் குறைவாக இறந்தால் காபியின் வெப்பம் குறைவது அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். அதனால தான் சூடா இருக்கும் காபியை ஆத்தாம வச்சுருந்தா வேகமா ஆறிடும். அதுக்குப் பிறகு அதை ஆத்திக்கலாம்.

இதுக்குக் கூட விதி இருக்கான்னு கேட்கலாம்.

ஆமாங்க, அதத் தான் நியுட்டன் விதியா சொல்லி இருக்கார்..

அதாவது, “ஒரு வெப்ப பொருளின் குளிர்தல் விகிதம், அந்த வெப்ப பொருள் மற்றும் வெளி வெப்பநிலை இவற்றின் வித்தியாசத்துக்கு நேர் விகிதத்தில் உள்ளது”

இது தான் நியுட்டனின் குளிர்தல் விதி ஆகும்.

இப்ப புரிஞ்சு இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

இனிமே சூடான காபி, பால் போன்றவைகள் கொடுத்தா கொஞ்ச நேரம் விட்டிங்கன்னா போதும். தானாகவே குளிர்ந்து விடும்.