Saturday, December 9, 2017

பலூன் கிட்ட வருமா?

என்ன ராமு, ஆசிரியர் கிட்ட கேட்டியா, ரெண்டு நாளா நீ சொன்னதுக்கெல்லாம் என்ன காரணம் என்று?
ராமு புத்திசாலி, ஃபனல் உள்ள பந்த எப்படி எடுக்கிறது மற்றும் பந்து எப்படி மேல டானஸ் ஆடுறது, ஆகியவற்றுக்கெல்லாம, ஆசிரியரிடம் இருந்து, பதில் கேட்டுண்டு வந்து இருப்பான்னு நினைக்கிறேன்.
ஆமாம் அப்பா,ஆசிரியரிடம் நீங்க சொன்னது போல எல்லாத்துக்கும் என்ன சார் காரணம், என்ன விஞ்ஞானம் உள்ளது  என்று கேட்டேன். அதுக்கு சார் உடனே,  
கொஞ்சம் பொறுத்துக்கோ, இன்னைக்கு மற்றொரு சோதனை காண்பிக்கிறேன், அதப் பண்ணிப் பார்த்துட்டு வா. எல்லாத்துக்கும் சேர்த்து என்ன காரணம்ன்னு சொல்றேன்” , அப்படீன்னு சொல்லிவிட்டார் அப்பா.
அப்படி என்ன புதுசா சொல்லிக் கொடுத்தார் ராமு
“”இத நம்ம வீட்டுலயே செய்யலாமாம்.  
ரெண்டு பலூன் அல்லது எடை குறைவா உள்ள பந்துகளை அருகருகே இருக்குமாறு ரெண்டு நூல் மூலமா தொங்கவிடவேண்டும். ஆடாம இருக்கும் போது, ரெண்டு பலூனுக்கும் இடையே ஊதணும்.”
இப்ப என்ன ஆகும் ராமு”.
ரெண்டு பலூனும் அருகருகே வரும், ஊதறத நிறுத்திட்டா விலகிச் செல்லும். இதுவும் கூட ஏற்கனவே நாம பாத்தோமே அதே தத்துவத்தில தான் வேலை செய்யறது என்றும் சொன்னார்  அப்பா.”
படம் காண்பிச்சு இருக்கேன் அப்பா பாருங்க.”.
ஆமா,ராமு நீ சொல்றமாதிரி தான் நா வாயால ஊதற போது நெருங்கி வரது, ஆனா நாம நினைச்சது என்னன்னா விலகி செல்லனும்
இதுக்கெல்லாம் காரணம்  ஒரே விதி தானாம், சொல்றேன் அப்படீங்கிறார் அப்பா”.
நானே உங்க ஆசிரியரப் பார்த்து கேட்கலாம்ன்னு இருககேன்,இதுக்கெல்லாம் என்ன காரணம்ன்னு”.

ஆமாம் அப்பா,வாங்கப்பா, ஆசிரியரைப் பாக்கலாம்.” 
விடியோவையும் பாருங்க


No comments:

Post a Comment