Monday, April 16, 2018

மாயமில்லை மந்திரமில்லை







மாயமில்லை ,மந்திரமில்லை  !!!!!!

சமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். அதனை இரண்டு படங்களாக காணபித்துள்ளேன்.
அதுல ஒரு பொம்மை பாத்திரத்தில் இருக்கும். பாத்திரத்தில் தண்ணீர் சேரத்துக்கொண்டே வருவார்கள்.அதன் வாய் வரை தண்ணீர் சேரப்பாரகள், தண்ணீர் அதிலேயே இருக்கும். ஆனால் வாய்கிட்ட நீர் வந்தவுடன் எல்லா தண்ணீரும் காலியாகிவிடும். மாயாபஜார் படத்துல கடோத்கஜன் எப்படி எல்லா ஆகாரத்தையும் சாப்பிடுவானோ, அதே மாதிரி இங்கு எல்லா நீரும் காலியாகிவிடும்.
பார், எப்படி எல்லா தண்ணீரையும் கடோத்கஜன் சாப்பிட்டு விட்டான் என்று பீத்திக்கொள்வாரகள்.(படம் 2)
என்னடா இது புதுசா இருக்கு?
நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சி ஆச்சரயமா இருக்கும்.
ஆந்திர மாநிலத்தில் ஒரு நரசிம்மர் சன்னிதியில, நாம பானகத்தை நரசிம்மர் வாயில் ஊத்தினா பாதிய எடுத்துண்டு மீதி பாதிய நமக்கு பிரசாதமா கொடுப்பார் என்றும் சொல்வார்கள். நீங்களும் கேட்டு இருப்பீர்கள்!!!
இதுல எந்த மாயமும இல்ல.
விஞ்ஞானத்தின் மூலமா இத விளக்கலாம். ஒண்ணுமில்லை, இது சைஃபன் என்ற தத்துவத்தில் வேலை செய்கிறது.
இந்த ஐடியாவ நம்ம வீட்டுல நாம பயனபடுத்துற WESTERN TOILET, பயனபடுத்துறாங்கன்னா பாத்து இருப்பீர்கள்?
படத்த பாருங்க, அதுல யூ மாதிரி இருக்கற இடத்துல எப்பவும் தண்ணி இருந்துண்டே இருக்கும் இல்லையா.

அது போலத்தான் படம் 2 ல காண்பித்தது போல ஒரு பிளாஸ்டிக் குழாய வச்சு அது மேல, குழாய் தெரியாம ஒரு பொம்மையை வைத்துடணும்.குழாயின் மறுமுனை பாத்திரத்தின் கீழ் வழியா கொண்டு போய் லீக் இல்லாமல் செய்துடணும்.
இப்ப பாத்திரத்தில் தண்ணி ஊத்தினா, தண்ணி வாய் வர வரைக்கும் ஒண்ணும் ஆகாது. வாயகிட்ட வந்தவுடன் எல்லா தண்ணியும் மேல அழுத்தம் இருக்கிறதால மறுமுனை வழியா வெளியேறிடும்.
இது தான் சைஃபன் தத்துவம்.
இத வச்சு தான் அந்த வாசுதேவ கிருஷ்ண பொம்மையும் வேலை செய்யுது.
அதுலயும் இந்த மாதிரி குழாய் வச்சுருப்பாங்க. தண்ணி கால தொட்டவுடன் எல்லா தண்ணியும் வெளியே வந்துடும்.
எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க பாருங்க!!
எப்படி பிசிக்ஸ் ஈசியா இருக்கு பாருங்க!!!!!

No comments:

Post a Comment