Tuesday, December 17, 2019

எடை குறைக்க என்ன வழி? பகுதி-1

என்னது, எடைய சுலபமா குறைக்க வழி இருக்கா?
மரத்தடியில அவர் ஏதோ சிந்தனைபில் ஆழ்நதிருந்தார். எந்தப் பக்கம் போனாலும் உதைக்கிறதே? என்ன செய்வது?
என்ன முடிவு கிடைக்கும்? நாம் எடுத்து இருக்கும் முடிவு சரியாக இருக்குமா? இப்படி பல சிந்தனையில் சிறிது நேரம் கண்ணசைந்து விட்டார்.
திடீரென்று தலையில் பலமான அடி! திடுக்கிட்டு விழித்துப்பாரத்தால் மேலிருந்து ஒரு பழம் தலையில் விழுந்து சிறிது தூரத்துக்கு ஓடி நின்றது. 
ஆம், அது ஆப்பிள் பழம் தான்!
அது ஏன் தன் தலையின் மீது விழவேண்டும்?
ஆப்பிள் மட்டும் தான் விழுமா, இல்லை எல்லாப் பழங்களுமே விழுமா?
யோசிக்கத் தொடங்கினார்.
உடனே பக்கத்தில இருந்த கல்லைத் தூக்கி எறிந்தார். அது கொஞ்ச தூரம் மேலே போய்விட்டு கீழே தான் விழுந்த்து. 
சிந்திக்கத்துவங்கினார்.

(பிஸிக்ஸ்னா காததூரம் போகும் நம்ம கிச்சா மைண்ட் வாய்ஸ்,”இவர யார் சிந்திக்கச் சொன்னாங்க, வாத்யார் நம்மளப் போய் அந்த விதியைப் படி, இந்த விதியைப் படின்னு கழுத்தறுக்கிறாங்கன்னு”, சொல்றது காதுல விழறது.)

ஏன் கல்லு தூக்கிப் போட்டாலும் கீழே விழறது, பழத்தப் போட்டாலும் கீழே விழறது!!! கொஞ்சம் வேகமா தூக்கிப் போட்டு பாரத்தார். கொஞ்ச அதிகமான உயரம் போயிட்டு மீண்டும் தரையை நோக்கியே விழுந்த்து,
ரெண்டு மூணு நாள் அதே சிந்தனை.
முடிவுக்கு வந்தார்!!
என்ன முடிவு?
யார் முடிவு செய்தார்?
மண்டையக் குடையுதா?
அடுத்த பகுதியில பாப்போம், என்ன சரியா?

1 comment: